புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கோம்பாவில் பகுதியில் வீதி ஓரத்தில் உள்ள இரும்பு கடை அமைந்துள்ள வளாகத்தில் விடுதலைப்புலிகளால் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நடவடிக்கையினை கைவிட்டுள்ளார்கள். இந்நிலையில், மீண்டும் நேற்று காலை தொடக்கம் மாலை வரை தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது கிராம அலுவலகர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர் பொலிசார், படையினர் ஆகியோர் முன்னிலையில் இரும்பு வணிப நிலையத்தில் இரண்டு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அங்கு எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது