Header image alt text

யாழ் – வல்லைவெளியில் விபத்து இருவர் மரணம்

valaiபருத்தித்துறையிலிருந்து சுன்னாகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் வண்டியும் யாழ் – வல்லைவெளிப் பகுதியில் வியாழக்கிழமை (26) மாலை நேருக்குநேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். முருகையா ஜெனார்த்தனன் (வயது 25) சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ரவிச்சந்திரன் அஜந்தன் (வயது 14) என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. பஸ் சாரதியைக் கைது செய்துள்ள அச்சுவேலி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆக உயர்வு – மட்டக்களப்பு

hospitalமட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை(25) நடைபெற்ற திருமண வைபவமொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டோரில் சிலர், உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு உள்ளாகியுனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
மண்முனை மற்றும் தாழங்குடா, ஆரையம்பதி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் பெரியோர், சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்
தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்துள்ளார்.

விழிநீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 27 March 2015
Posted in செய்திகள் 

விழிநீர் அஞ்சலிகள்
img141யாழ். புலோலி, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும்,  பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு.திருமதி சூசைதாசன், ரஜினா ரட்னமணி அவர்களின் அன்பு மகன் எட்வேட் வில்சன் அவர்கள் 25.03.2015 புதன்கிழமை பிரான்ஸில் மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். 
 
அன்னார் தவச்செல்வியின் அன்புக் கணவரும், கார்மேகவர்ணன், சுவேதனா, துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். முன்னர் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புகளை பேணிவந்த இவர் அண்மைக்காலங்களாக பிரான்ஸ் நாட்டில் எமது அமைப்பின் செயற்பாட்டாளராக இயங்கி வந்தார்.
 
அண்மைக்காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த எட்வேட் வில்சன் அவர்கள் நேற்று முன்தினம் (25.03.2015) புதன்கிழமை மரணமெய்தியுள்ளார்,
 
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
 
மேலதிக விபரங்களுக்கு :  ஜோன்சன்- 0033 652388554,   சுகுமார்-0033 751179646 
                                         ரவி -0033 652270142

இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய கடற்படை-

indian navyஇந்தியாவின் நான்கு கடற்படை கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தும் முகமாகவே இன்றைய தினம் இக்கப்பல்கள் இலங்கையை வந்தடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஐ.ஆர், சேகரி, வருணா மற்றும் சுதர்சினி ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல்களின் விஜயத்தினால் இலங்கை கடற்படையினருடன் தொழில் பயிற்சிகள் மற்றும் கலாச்சாரம், விளையாட்டு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறான பயிற்சிகள் ஏப்ரல் 2013 இல் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது. முதல் பயிற்சியின் போது ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வருகைதந்திருந்ததுடன், கடற்படை அதிகாரிகளுக்கு கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பரிந்துரைப்பு-

american ambasadorஇலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக அதுல் கேஷாப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவே அதுல் கேஷாப்பை, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அமெரிக்காவுக்கான புதிய தூதராக பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று வெளியிட்டுள்ளார். திறமை வாய்ந்த நாட்டுக்காக சேவை செய்யக்கூடியவர் என்ற அடிப்படையில் அதுல் கேஷாப் பரிந்துரைக்கப்படுவதாக பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். கேஷாப் இந்தியாவுக்கான தூதுவராக 2005- 2008 வரை பணியாற்றியுள்ளார். கேசாப் இந்தியா வம்சவாளியை சேர்ந்த அமெரிக்கர். மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளராக அதுல் கேஷா­ப் கடமையாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழில் சந்திப்புகள்-

Ranilவடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் மக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்’பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்,மகளிர் விவகார அமைச்சர், பிரதி அமைச்சர், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதியின் சகோதரர் மீது தாக்குதல்-

policeஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன பெதிலை பகுதியில் வைத்து நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் விசேட வானூர்திமூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். கோடரியால் வெட்டியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகநபரான லக்மால் என்பவர் பக்கமுன பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஏயார் சீப் மார்ஷல் ரொசான் குணதிலக்கவிடம் விசாரணை-

gunatillekeபாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியான ஏயார் சீப் மார்ஷல் ரொசான் குணதிலக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினரால் இவ் விசாரணை முன்னெடுக்கப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக க் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது.

பொன்னாலை கலாச்சார பொது மண்டபத்தில் சர்தேச மகளிர்தின நிகழ்வு-

P1020772P1020752சர்வதேச மகளிர் தினம் கடந்த 19.03.2015 அன்று யாழ். பென்னாலை கலாச்சார பொது மண்டபத்தில் பொன்னாலை மாதர்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திருமதி. தவஆனந்தி சந்திரகாந்தன் தலைமையில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பித்தது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சங்கானைப் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா. செந்தூரன், சங்கானைக் கேட்டக்கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியம்பிள்ளை, லயன்.தி.உதயசூரியன், கரிதாஸ்-கியூடெக் நிறுவன திட்டப்பணிப்பாளர், திருமதி. பத்மசேகரி இளைப்பாறிய முன்னாள் அதிபர்கள் ஆகிய திருமதி. கிருபாசக்தி சிவராசா மற்றும் சகலகலாவல்லி. சந்திரராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் இவ் நிகழ்வில் சிறப்பு அதிதியாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். Read more

தீவிரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை-பிரதமர்-

ranil01நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குதுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதி, மத, இன பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் சுமுகமாக வாழ்வதற்கான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், இதற்காக அனைவரும் அப்பர்ணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் அடுத்த இலக்கு. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டதன்படி, 19ம் திருத்தச் சட்டம் தற்போதும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல்செய்து வருகின்றனர். இந்த மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றம் தீப்பளித்த பின்னர் அதனை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் காரியாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் பாட ஊக்குவிப்போம்-பிரதமர் ரணில்-

Ranilதேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேடகுழு அமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணை மற்றும் அதனை கொண்டுவந்த நாடுகள், புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பான் கீ மூனுடன் கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களே ஐ,நா மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்க காரணமாக அமைந்தது. ஆனால் நல்லிணக்க விடயங்களில் சர்வதேசத்திடம் சரணடையத் தேவையில்லை. நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை. பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பிரதான ஊழல் மோசடிகாரர்களை பிடிக்க சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் தீர்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அனைத்தும் சட்ட ஆலோசனைபடி பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் வங்கிக்கணக்கை பரிசோதிக்க உத்தரவு-

gotabaya......பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு காலி நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி தூய்மையாக்கல் சட்டத்தின்கீழ் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இதுதவிர தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மீண்டும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதேவேளை, கப்பலின் காப்புறுதிக்கான கால வரையறை இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக, ஆயுதக் களஞ்சிய கப்பல் உரிமையாளர் நிறுவனத்தின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட கப்பல் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதுடன், எண்ணெய்க் கசிவு ஏற்படுமாயின், துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கப்பலிலுள்ள ஆயுதங்களுடனான 22 கொள்கலன்களையும் வேறொரு கப்பலில் ஏற்றுவதற்கும், களைப்படைந்துள்ள கப்பல் பணியாளர்களுக்கு பதில் வேறு பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். இதற்கமைய அந்த பணியாளர்களுக்குப் பதிலாக வேறு பணியாளர்களை கப்பலில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கிய காலி நீதவான், ஆயுதங்களை வேறொரு கப்பலில் ஏற்றுவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்-அமெரிக்கா-

nisha thesai biswalஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில் ஜனநாயகத்தை முன்னெடுக்க அவர்களுடன் வேலை செய்தலிலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் செயலாளர் கெரியும் வழங்கியுள்ள உறுதிகளை நான் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார். இவ்வாறான உறுதிமொழிகள் இலங்கை ஜனாதிபதியினால் கேட்கப்பட்ட வரவு – செலவுத்திட்டத்துக்கான உதவிகளில் பிரதிபலிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரவு – செலவுத்திட்டத்துக்கான உதவிக் கோரிக்கை இலங்கை ஜனநாயகம் நோக்கிய மாற்றங்கள் ஏற்பட முன்னர் முன்வைக்கப்பட்டவை. இதனை நாம் எமது திட்டங்களில் மட்டுப்படுத்தினோம். இப்போதுள்ள அரசாங்கம் வித்தியாசமானது. நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வர்த்தகம் மற்றும் வேறு விடயங்களில் இலங்கைக்கு உதவக்கூடிய பாரிய வாய்ப்புக்களை நாம் காண்கின்றோம். முன்னைய ஆட்சியை விட ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியின்கீழ் ஜனநாயக நிறுவுதல், சமத்துவ பொருளாதார வளர்ச்சி, இனங்களுக்கிடையேயான பதற்றக்குறைவு என்பன கூடுதலாக உள்ளது என்று நிஷா தேசாய் பிஸ்வால் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்-

chandrikaதேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இந்த தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ஜனாதிபதி மாளிக்கைக்கு முன்பாகவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சார்டட் வங்கியின் கட்டிடத்திலேயே இந்த செயலணியின் நடவடிக்கைகள் இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு அழைப்பாணை-

thevarasaவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி அழைக்கப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களது விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு, கிழக்கு மாகாண சிவில் ஒன்றியத்தினால் அண்மையில் 8 மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தினை முன்னின்று தேவராசா நடாத்தியிருந்தார்.

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு-

weddingஅரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் நேற்று தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு தொடர்பான அறிவித்தல் கோரும் நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் கட்டணம் 100 ரூபாய் ஆகியவற்றில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் கூறினார். புதிய நடைமுறையின்படி பதிவாளர் கட்டணம் 750 ரூபாய், பதிவுக் கட்டணம் 50 ரூபாய், நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் கட்டணம் 100 ரூபாய் என ஆக மொத்தம் 1,000 ரூபாய், திருமணப் பதிவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

நோயாளர் காவு வாகனங்களுக்கு அதிவேக வீதியில் இலவச அனுமதி-

high wayநோயாளர்களை காவிச் செல்லும் போது, அம்பியுலன்ஸ் எனப்படும் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் இலவச அனுமதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. புத்தளம், சிலாபம், குலியாபிட்டிய மற்றும் நீர் கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவான நோயாளர்கள் கொழும்புக்கு நோயாளர் காவுகை வாகனங்களின் ஊடாக அழைத்து வரப்படுகின்றனர். இதன் போது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு காவுகை வாகனங்களின் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லை மீள்நிர்ணயத்தின் பின்பே தேர்தல் நடத்தவும்-பெப்ரல்-

rohana hettiarachchiஎல்லைகளை மீள்நிர்ணயம் செய்ததன் பின்னர், உள்ளுராட்சி மன்றங்ளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 335 உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இந்த மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் இக் கருத்தைக் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது-

puthaiyalவவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சாவகச்சேரியை சேரந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனோரை கண்டுபிடிக்க செஞ்சிலுவைச் சங்கம் உதவி

ICRCஇலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் எ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் பணிப்பாளர் டொமினிக் ஸ்டில்ஹாட் இலங்கைக்கு ஐந்துநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த விஜயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவங்களை பயன்படுத்தி இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தம்மால் உதவ முடியும் என்று ஸ்டில்ஹாட் கூறியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், 1990ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் உறவினர்களின் தகவல்களைக் கொண்டு நாடளாவிய ரீதியில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தது. இதன்போது சங்கத்துக்கு 16 ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நஞ்சுத்திரவம் கலப்பு தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது-

arrest (30)யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட பாடசாலை காவலாளிகள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் கடந்த 18 ஆம் திகதி இரவு நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டது. மறுநாள் அந்நீரைப் பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீர்த்தாங்கியினுள் இருந்து நஞ்சு போத்தல் ஒன்றை மீட்டனர். இதனையடுத்தே, நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தெரியவந்தது. இதனையடுத்து பாடசாலை காவலாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மயிலங்காடு பகுதியை சேர்ந்த 34வயதுடைய பிரதான சந்தேகநபர் கைதானார்.

துறைமுக நகர் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை-

port cityஇலங்கையில் பாரிய முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1.4பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர் திட்டம் கைவிடப்படக்கூடாதென இலங்கை-சீன சமூக கலாசார ஒத்துழைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. சீன பங்குதாரர்களுடன் திறன்வாய்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு குறித்த சங்கம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை இலங்கை-சீனாவிற்கு இடையிலான பொருளாதார, முதலீட்டு, இராஜதந்திர உறவுகளை பாதித்துவிடக் கூடாதென சங்கம் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் குறித்து உள்ள பிரச்சினைகளை சீன விஜயத்தின்போது முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை-சீன சமூக கலாசார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் அபேசேகர தெரிவித்துள்ளார். துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் திட்டத்தை செயற்படுத்தும் சீனாவின் நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணங்களை கையளித்துள்ளது. திட்டம் நிறுத்தப்படுவதால் தமக்கு 380,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம்-

maithriநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனாவிற்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி இன்று பிற்பகல் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தினை சென்றடையவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனப் பிரதமர் லீ கே சியனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு சீன ஜனாதிபதி ஷி ஜிங் பிங் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. சீன ஜனாதிபதியுடன் நாளை பகல் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ராஜித சோனாரத்ன, ரவூப் ஹக்கிம், ஜகத் புஸ்பகுமார, விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை-

basilமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பாரியளவு நிதி மோசடி தொடர்பில் பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு அழைத்துவர வேண்டியுள்ளதென அவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றதை அடுத்து பசில் ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு பாராளுமன்றில் மூன்று மாத விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியில் பொலிஸ் உத்தியோத்தர்கள்மீது தாக்குதல்-

police ...கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப் பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோத்தர்கள் சிலர் மீதே தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சுற்றிவளைப்பின் போது பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அங்கு வந்த சிலர் பொலிஸார்மீது தாக்குல் மேற்கொண்டு சந்தேகநபரை பலவந்தமாக விடுவித்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இந்த தாக்குலில் இரண்டு பொலிஸ் உத்தியோத்தர்கள் காயமடைந்துடன் தாக்குல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் புதிய அரச அதிபராக நாகலிங்கம் வேதனாயகன் கடமையேற்பு-

vedanayagamயாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் கடமைகளை பொறுப்பேற்றார் யாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நாகலிங்கம் வேதனாயகன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ் மாவட்டதிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அரச அதிபர் இன்று தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நாகலிங்கம் வேதனாயகன் கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேவேளை யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முகத்தை மூடும் தலைக்கவசத்துக்கு மீண்டும் தடை

helmedமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதிமுதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதிமுதல் தடைசெய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். எனினும் இத்திட்டம் பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய அத்திட்டத்தை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

19வது திருத்தத்தத்துக்கு ஜே வி பி ஆதரவு-

JVP19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை வெற்றிப்பெற செய்யும் தரப்பினரையே தாம் ஆதரிப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. பத்தரமுல்லயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே தாம் அதற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தப்பிச்சென்ற இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு-

armyஇராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற வீரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இராணுவத்தினருக்கு ஏப்ரல் 2ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை, பொது மன்னிப்பு வழங்கும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன்-பீல்ட் மார்ஷல் பொன்சேகா-

sarath fonsekaதான் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய உத்தியோகபூர்வ சீருடையின் கௌரவத்தை பேணி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக முன்நிற்பதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மூளாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையில் சந்திப்பு-

அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. இராதாகிருஸ்ணன் அவர்கள் வலிமேற்கில் அமைந்துள்ள மூளாய் அமெரிக்கன் மிசன் தழிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார் இதன்போது வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சம்பிரதாயபூர்வமாக அங்கு அழைக்கப்பட்டார். இவ் நிகழ்வினபோது பாடசாலையின் அதிபர் திரு. க.லோகேஸ்வரன் அதிதிகளை வரவேற்றதுடன் அதிதிகள் வருகைப் பதிவேட்டிலும் குறிப்பினைப் பெற்றுக்கொண்டார் இதன்போது பாடசாலையின் தேவைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தார். குறித்த இப் பாடசாலையின் தேவைகள் குறித்து பாடசாலை நிர்வாகம் 2012ம் ஆண்டில் குறிப்பிட்டதன் பின்னர் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் அனாத்த முகாமைத்துவ அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையில் மாணவர்கள் பாதுகாப்பாக செல்லக்கூடியதான பாதை ஏறத்தாழ 0.6 மில்லியன் செலவில் நிறைவு செய்யப்பட்டது. இதேவேளை பாடசாலைக்குரிய அலுவலக தளபாடங்கள் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களது ஒதுக்கிட்டின் வாயிலாக தவிசாளரால் பெற்று கொடுக்கப்பட்து குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை மேற்படி நிகழ்வின் பின்னர் அமைச்சரும் தவிசாளரும் அப் பகுதி மக்களது பல்வேறு குறைபாடுகள் தொடாபில் கேட்டு அறிந்துகொண்டனர்.

வலி மேற்கில் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் மருத்துவ உதவிகள்-

ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுகளின் பல்வேறு உதவிகளும் தாயக உறவுகளுக்காக வழங்கப்பட்டுவரும் நிலையில் அண்மையில் செல்வதுறை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வலிமேற்கு பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஊன்றுகோல் உதவிகள் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 23.03.2015 அன்று வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வைத்து பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்டது.

லலித் குகன் தொடர்பில் அழைப்பாணை மற்றும் ஆர்ப்பாட்டம்-

arpattam2011ஆம் ஆண்டு காணாமற்போன முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ். நீதவான் பொ.சிவகுமார், நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இதேவேளை, இந்த வழக்கின் சாட்சியாளரான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமையால், அவரையும் அடுத்த தவணையில் மன்றுக்கு வருமாறு நாடாளுமன்றத்தினூடாக அழைப்பாணை விடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார். Read more

ஜேர்மன் விமானம் 150 பயணிகளுடன் பிரான்ஸ் மலைப்பகுதியில் விழுந்தது

Fa320ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானநிறுவனத்தின் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம்; ஒன்று ஸ்பானியாவின் பார்சிலோனா நகரில் இருந்து ஜேர்மனியின் டுசல்டார்ஃப் நகருக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் டின் லே பான் நகருக்கு அருகே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்துள்ளது.
அந்த விமானத்தில் மொத்தம் 150 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது. விமான விபத்தில் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் 5000 அடி  உயரத்தில் பறந்ததாகவும் விழுவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
a320.இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பானியா மற்றும் ஜேர்மன் நாட்டை சேந்தவர்கள். விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் ஜேர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்களும் பயணித்துள்ளனர்.
இதனிடையே விமானம் குறித்த தகவல்களை, தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டிகளில் ஒன்று விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ள விமானம் தூள்தூளாகச் சிதறியுள்ளதாகவும், எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்றும் விமானத்தில் பயணித்த 150பேரும் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்படுகிறது

 

 

நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்தது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது-

arrest (30)யாழ். ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமைநேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தின்பேரில் நேற்று கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் நேற்று அவர்களது வீடுகளில் வைத்து கைதுசெய்துள்ளனர்.இருவரையும் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவரும் பொலிஸார், இச்சம்பவம் அரசியல் உள்நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மேற்படி பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை- தமிழக மீனவர்களிடையே பேச்சுவார்த்தை-

fishermen speakஇலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை டி.எம்.எஸ். மீன்வளத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்காக, இலங்கை மீன்பிடித்துறை இயக்குநர் பெர்னாண்டோ தலைமையில், மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சதாசிவம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர், நேற்று சென்னை சென்றிருந்தனர். இரு நாட்டு மீனவர்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.