Header image alt text

வாகரையிலிருந்து கொழும்பிற்கு நேரடி பஸ் சேவை-

busமட்டக்களப்பு வாகரை பேருந்து சாலையானது பயணிகளின் நன்மை கருதி கொழும்பிற்கான தமது நேரடி பேருந்து சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இப் பேருந்து சேவையானது இன்று முதல் திருகோணமலை சேருநுவரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வாகரை ஊடாக வாழைச்சேனை நகரம் வந்தடைந்து அங்கிருந்து கொழும்பிற்கான சேவையினை மேற்கொள்ளவுள்ளது. தினமும் காலை 7 மணிக்கு திருகோணமலை சேருநுவரவில் இருந்து புறப்படும் பேருந்தானது மாலை 4மணிக்கு கொழும்பினை சென்றடையும். மறுநாள் மாலை 4 மணிக்கு கொழும்பில் இருந்து அதே வழிப்பாதையில் சேருநுவரவிற்கு 12 மணிக்கு சென்றடையும். இதேவேளை, வாகரை பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தூர இடங்களுக்கான போக்குவரத்தினை வாழைச்சேனை நகரம் வந்து புகையிரதம் மற்றும் தனியா் அரச பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவது வழக்கமாகும். இதனால் நேர விரயமும் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர். மேற்படி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்து பிரதேச மக்கள் சாலை நிர்வாகத்திற்கு தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

வாக்காளர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்-

election2015ம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காலம் இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. குறித்த பெயர்ப்பட்டியல் கிராம சேவகர் அலுவலகம், மாவட்ட தேர்தல் செயலக அலுவலகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த விபரங்களை பார்வையிட முடியும். அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் செயலக அலுவலகங்களுக்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. புதிதாக பெயர்கள் அதில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், திருத்தங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.

ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர் அவுஸ்திரேலியாவில்-

ravirajதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாபியன் ரோய்ஸ்டன் டௌசியன்கூ என்ற சந்தேக நபரே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதாகவும் அவரை கைது செய்து கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறும் இலங்கைப் பொலிஸார் அவுஸ்திரேலிய பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபர் பணியாற்றும் தனியார் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த மாலினி வென்டுரா என்பவருக்குச் சொந்தமானது என்றும் 2014ஆம் ஆண்டு அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை அங்கு பணியாற்றிய கொலைச் சந்தேகநபர் தற்போது தமது நிறுவனத்தில் பணியாற்றுவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை பணியிலிருந்து விலக்கியதாகவும், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு உடனடி இடமாற்றம்-

policeஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபர் என. கே. இளங்ககோனினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சாவகச்சேரி தலைமையகத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்தின் மக்கள் ஒருங்கிணைப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். கேகாலை பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே, சாவகச்சேரி பிரதான பொலிஸ் பரிசோதகராக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.டி.சி.பிந்து புத்தளம் வலயத்திற்கும், பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸ்ஸையிலிருந்து மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்-

vidyaபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார். இன்றையதினம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல்-

dumindaசொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011,2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தமது சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஊழல் விசாரணை ஆணைக்குமு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு-

drawnயாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோது படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டார். ஒருவர் நீந்திக் கரைசேர்ந்தார். மற்றயவர் கடல் அலையில் அடித்துச் செல்லும்போது சக மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது. எஸ்.ஜோர்ஜ் (வயது 45), அந்தோனிமுத்து ஜெனிபட் (வயது 34) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பதில் நீதிவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவுநாள் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

image_13முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட ஆறாம்கட்டை கயட்டைப் பகுதியில் நேற்று ஆழிப்பேரலை நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. சுனாமியில் மரணித்தோரது உறவினர்களுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி சிறீஸ்கந்தராஜா, அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. துரைராசா ரவிகரன், வன்னி மேம்பாட்டுக்கழக தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், பங்குத் தந்தை, அருட் சகோதர்கள், அருட் சகோதரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், அலுவலர்கள், ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டு நினைவுச் சுடர்களை ஏற்றி மலர்துவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். Read more

செங்கலடி கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை-வியாழேந்திரன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

dfgggமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் நேற்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள வீதிகளையும், கால்வாய்களையும் பார்வையிட்டதுடன் அங்குள்ள ஒழுங்கற்ற வீதிகள், கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அத்தோடு இப்பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். Read more

பேரவையின் தீர்வுத் திட்டங்களை ஆராய உபகுழு நியமனம்-(படங்கள் இணைப்பு)

peravaiதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக பேரவையின் இணைத்தலைவர் வைத்தியக் கலாநிதி பி. லக்ஸ்மன் தெரிவித்;துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் முடிவில் இடமபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த மக்கள் பேரவையானது அடுத்த கட்டதை நோக்கி செல்லவேண்டி உள்ளது. அதனடிப்படையில் தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு உப குழு ஒன்று நியமிக்கபட்டுள்ளது. இக்கழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐந்து அங்கத்தவர்களை கொண்ட வெளிநாட்டு நிபுணர் குழு இணைக்கப்படவுள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சபையில் முன்வைக்கப்பட்டு சபையால் ஏற்றுக்கொள்ளபட்ட பின்னர் மக்களிடம் வெளிப்படுத்தப்படும்.
Read more

சுன்னாகம் கிணற்றுநீர் தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்-

chunnakamயாழ். சுன்னாகம் பகுதி கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த குடிநீரை குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களே பதில் கூறுங்கள் எனக்கோரி யாழ்.சுன்னாகம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று நடத்தினர். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் குறித்த கவனயீர்ப்பு சுன்னாகம் முனியப்பர் கோவில் முன்றலில் இடம்பெற்றது. வடமாகாண நீர்வழங்கல் அமைச்சு நிபுணர்குழு ஒன்றை உருவாக்கி குறித்த நிபுணர்கள் குழு இறுதி அறிக்கையினை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் சுன்னாகம் நீரில் அச்சுறுத்தும் வகையிலான பார உலோகங்கள் இல்லை எனவும், குடாநாட்டு நீரில் மலக்கிருமிகளின் தாக்கம் உள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அறிக்கை தமக்கு சாதகமாக உருவாக்கபட்டுள்ளது எனவும் சுன்னாகம் குடிதண்ணீரை குடிக்கலாமா? குடிக்க கூடாதா? என்பதை மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் கூறவேண்டும் என வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கிண்ணியாவில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு-

kinniyaதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார். பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச் சென்றபோது, இவர் காணாமல் போயுள்ளார். பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இவரைத் தேடும் நடவடிக்கை சனிக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இவரது சடலம் கரையொதுங்கியதாகவும், ஏனைய இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மகிந்தவின் புதிய கூட்டணி-

mahinda (4)மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்பு அணியினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கு பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போராட்டம் காரணமாகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிளவின் விளிம்பில் இருப்பதாகவும், அதில் அங்கம் வகிக்கும் 15பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரவையின் ஊடாக நல்லிணக்கம் பெற வாய்ப்புண்டு-வடமாகாண முதலமைச்சர்-

cv vதமிழ் மக்கள் பேரவையின் ஊடாக சேர்ந்து அனைவரும் கைகோர்க்கும் போது புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற வாய்ப்புகள் இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தழிழ் மக்களுடைய கரிசனைகள் பல இருக்கின்றது. வருங்காலத்தில் தழிழ் மக்களுடைய காலம் எவ்வாறு அமைய வேண்டும். எமது பாரம்பரியத்தில் பண்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது. அதற்கு அமைவாக அரசியல் யாப்பு அமைப்பு தொடர்பிலும் எங்களுக்கு கரிசனை இருக்கின்றது. வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை யெனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தழிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து வெளியீடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தழிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் எமது கட்சியின் ஊடாக இது தொடர்பாக தெரியப்படுத்தலாம். பல எதிர்ப்புகளை தாண்டுவது தான் ஐனநாயகம். எங்களுடைய மாறான கருத்துக்களை மற்றவர்கள் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதில் அவர்களை எதிரிகளாக நினைப்பது தவறு.
Read more

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பதினொரு வருடங்கள் பூர்த்தி-

tsunamiசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினொரு வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிவடைந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகர் காணாமற் போயினர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர். சுனாமியால் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, நாடளாவிய ரீதியில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும், காலை 9.25முதல் 9.27வரையிலான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவாஞ்சலியும், நன்றி நவிலலும்-

suppuஅமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பர்) அவர்களின் 31ஆம் நாள் நினைவாஞ்சலி நிகழ்வும் நன்றி நவிலலும் கடந்த 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் Schorndorfer  str.31 71638 Ludwigsburg என்னுமிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமரர் சிவகுமாரன் அவர்களது திருஉருவப்படத்திற்கு திரு யோகா புத்ரா அவர்கள் மலர்மாலை அணிவித்து மலராஞ்சலியுடன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அகல்விளக்கு சுப்பர் அவர்களின் பால்ய நண்பர்களான திரு. ஆனந்தராசா (கப்பல்) (உவடி) என சுப்பர் அவர்களால் அன்பாக அழைக்கப்படும் திரு. பத்மநாதன் ஆகியோரினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்தோர் மலராஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் உரைநிகழ்த்திய புத்திரா அவர்கள், சுப்பர் அவர்களது கடந்தகால சிந்தனைக் கருத்துக்கள் பற்றியும், அவர் தாயக மக்களின் தேவைகள் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்று யதார்த்தமாகியுள்ளது பற்றியும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திரு. ஜெகநாதன், ஆசிரியர் திரு விவேகாநந்தன் ஆகியோர் சுப்பர் அவர்கள் கடந்த காலத்தில் மக்களுடனும் நண்பர்களுடனும் எவ்வாறு பழகியவர் நடந்து கொண்டவர் என்பவற்றை நினைவுகூர்ந்தனர்.

மகிந்த அணியின் 15பேர் அரசாங்கத்துடன் இணைவு-

spமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமலே ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாகவும், இவ்வாறு இணைந்து கொள்வோரில் 6பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மகிந்த அணியினர் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும், அதிலிருந்து விலகும் மற்றுமொரு குழுவினர், மாற்றுக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கூறுகையில், தமது அணியின் உறப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை என்றும், இது கூட்டு எதிர்க்கட்சியைக் கண்டு அஞ்சி அரசாங்கம் பரப்பும் போலி பிரச்சாரம் என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.

கொழும்பில் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை-

busஅடுத்த ஆண்டு முதல் கொழும்பு நகரத்திற்குள் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் 2016ம் ஆண்டு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலில் இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறிய பஸ்கள் 80 இனைக் கொள்வனவு செய்தல், நாடு பூராகவும் உள்ள பஸ் டிப்போக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அனைத்து டிப்போக்களுக்கும் பற்றுச்சீட்டு இயந்திரங்கள் வழங்குவதை இறுதி செய்தல் உட்பட்ட பல திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சு கூறுகின்றது.

உயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு 73வது இடம்-

ssssஉயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 73வது இடம் கிடைத்துள்ளது. 2015ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 188 நாடுகளை மையப்படுத்திய தரப்படுத்தலில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் பெரும்பாலான அரச பணியாளர்கள் 60 வயதில் ஓய்வுபெறுகின்றனர். எனினும் சுயதொழில் மற்றும் நாளாந்த பணியாளர்கள் பல வருடங்களுக்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அது 12வீதமாக பதிவுப்பெற்றுள்ளது. இந்த தரப்படுத்தலில் இலங்கை 73 இடத்தில் உள்ளநிலையில் இந்தியா 130வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகியன முதல் ஐந்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் மோசமான புள்ளிகளை நாடுகளாக நைகர், எரிட்ரியா, புருண்டி தரப்படுத்தலில் கீழ் மட்டத்தில் உள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது சந்திப்பு-

vigneswaranவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட அமர்வு நாளையதினம் நடைபெறவுள்ளது.

இதன்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் தமிழ் மக்களின் கலை கலாசாரங்கள் குறித்த விடயங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கான விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு புதிய நடைமுறைகள் அறிமுகம்-

paffrelநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் சம்பந்தமாக புதிய பரிந்துரைகளை பல அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பம் இருப்பதாக பவ்ரல் அமைப்பு கூறியுள்ளது.

அரச அதிகாரிகள் தேர்தலில் போட்டியுடுவதன் மூலம் வாக்காளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பாடாதவாறு நடத்துவதற்கு நடைமுறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிடுகின்ற தொகையிலும் கட்டுப்பாடு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக உள்ளூராட்சி மன்ற அமைச்சர் மற்றும் உரிய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிப்பு-

ulluratchi sabaiஇதுவரை கலைக்கப்படாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் மேலும் 6 மாத காலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நகர சபை மற்றும் மாநகர சபைகளின் ஆட்சிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடக செயற்பாட்டாளர் கதீசன் மீதான தாக்குதலினை வன்மையாக கண்டிக்கிறோம்- தமிழ் தேசிய இளைஞர் கழகம்-

JOURNALISTவவுனியா பிராந்திய ஊடகவியாலாளர்களில் ஒருவரான இளம் சுதந்திர ஊடக செயற்பாட்டாளர் பாஸ்கரன் கதீசன் அவர்களின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படல் வேண்டும் என இளைஞர் கழகத்தின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அறிக்கையில், வவுனியா தர்மலிங்கம் வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியும், பந்தல்கள் அமைத்தும் வியாபாரம் மேற்கொண்டவர்களை வவுனியா நகரசபை, பொலிசாரின் துணையுடன் அகற்றியபோது செய்தி சேகரப்பில் ஈடுபட்டிருந்த சுயாதீன ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசன்மீது தனியார் நிறுவன ஊழியர் நடாத்திய தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதனை தமிழ் தேசிய இளைஞர் கழகமாகிய நாம் வலியுறுத்துவதுடன், இவ்வாறான தீர்ப்புக்கள் ஓர் முன்னுதாரணமாக இருப்பதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் இடம்பெறாமல் இருக்க இவ் தீர்ப்பு நல்லாட்சியில் எடுத்துக் காட்டாக அமைதல் வேண்டும்.
Read more

இரு பாடசாலை மாணவிகளைக் காணவில்லையென முறைப்பாடு-

missingபாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரைக் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வீட்டில் இருந்து இருவரும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். பாடசாலைக்கு சென்ற இருவரும் மாலை ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஜனவரியில் இலங்கைக்கு விஜயம்-

navasஎதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் விஜயத்தின்போது இலங்கையுடன் 10 இருதரப்பு உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்படவுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுவூட்டுதல், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரம், கலாசாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தரவுப் பரிமாற்றம், பணத் தூய்தாக்கலுடன் தொடர்புடைய நிதி நிலைமைகள் பற்றிய புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய சில துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகின்றது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போதே இறுதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை பாகிஸ்தான் இடையே நீண்டகால உறவுள்ளதுடன், இலங்கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சிகளையும், பாதுகாப்புத் தளபாட உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கிவருகின்றது.

தேர்தலில் ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு அர்ப்பணிப்பேன்-மகிந்த-

mahindaஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். கந்தானை நாகொடவிலுள்ள தனியார் வர்த்தக நிறுவனங்களைப் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வெள்ளை வான் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் இன்று அவ்வாறான ஒரு சூழல் இல்லை எனவும், ஆனாலும், தற்போது டிபெண்டர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

நத்தாரை முன்னிட்டு 557 கைதிகளுக்கு விடுதலை-

jailபுனித நத்தார் தினத்தை முன்னிட்டு 557 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன்படி ஜனாதிபதி மன்னிப்பின்கீழ், 557 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.