Header image alt text

கடற்படை முகாமுக்கு நிலங்களை சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு-

sdfdfdமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அங்கு கடற்படையினருக்கான முகாம் ஒன்றை அமைப்பதற்காகவே நிலம் கையகப்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது மறைமுகமாக சிங்கள மக்களின் குடியேற்றத்துக்கு உதவும் நடவடிக்கை என, வட மாகாண சபையின் துணை அவைத் தலைவர் அண்டனி ஜெகநாதன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு முகாம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவையில்லை என்றும், அந்தப் படைத்தளத்தை மையமாக வைத்து சிங்கள இராணுவத்தினரை குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இநிநிலையில் பரம்பரை பரம்பரையாக தான் உட்பட அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தமது நிலங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று சனிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் தாங்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு-

sadsdsdமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 730 மில்லியன் ஷரூபாய் மதிப்புள்ள தனது பீகொக்(மயில்) மாளிகையை கொடுக்க முன்வந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோடீஸ்வர வர்த்தகரும் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ராஜகிரியவிலுள்ள தனது பீகொக் மாளிகையை அவருக்கு வழங்க ஏ.எஸ்.பி லியனகே முன்வந்திருந்தார். எனினும், இறுதிநேரத்தில் மாளிகையை மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலேயே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துடன் இந்த ஆணைக்குழுவின் அதிகாரக் காலம் நிறைவடையவுள்ளது.

எனினும் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால், இதற்கான அதிகார கால நீடிப்பை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, இந்த சந்திப்புக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்ற அடிப்படையில், அதனை கலைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை உறுதியாகவில்லை-

al hussainஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹசைனின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்கு முன்னதாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில், கடந்த வருடம் ஜுன் மாதமே அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தது. எனினும் பல்வேறு காரணங்களுக்காக இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அறிக்கை-

tamil makkal avaiஅரசியல் தீர்வு சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்ட தீர்மானங்களின் முதலாவது அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படுமென, தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவின் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவின் கன்னி அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகியது. இதன் பொருட்டு பிற்பகல் 3.30 அளவில் நல்லூர் ஆலயத்திலும் அதனைத் தொடர்நது யாழ். மரியன்னை பேராலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. சுமார் மூன்று மணித்தியாலயங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் இரவு 7.00 மணியளவில் நிறைவடைந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

அத்துடன் தீர்வு திட்டங்களை முன்வைப்பதற்கான கலந்துரையாடல்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதுடன், 30ம் திகதி முதல் அறிக்கை ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் கையளிக்கப்படுமென்றும் அவர் கூறினார். Read more

புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம்-

new NIC12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும். இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும். அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும். Read more

பிரதமர் ரணில் சுவிஸ_க்கு விஜயம், நவாஸ் ஷெரீப் இலங்கை விஜயம்-

ranilnavasபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் சுவிட்சர்லாந்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார். பிரதமர் அலுவலகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தற்போது அவர் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்காண்டுள்ளார். இதேவேளை பாகிஸ்தானின் பிரதமர் நவாஷ் ஷெரிப் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 10 உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாக, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உணவு ஒவ்வாமையால் 250பேர் வைத்தியசாலையில் அனுமதி-

sdபலாங்கொடையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 250பேர், உணவு ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உண்டதையடுத்தே ஊழியர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எதுஎவ்வாறு இருப்பினும் இவர்களது நிலை ஆபத்தானதாக இல்லை எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குறித்த தொழிற்சாலையில் இடம்பெற்ற உற்சவத்தின் பின் இவர்கள் சுகயீனமுற்றதாக தெரியவருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 13,000 வாகனங்கள்-

ssமீள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 13 ஆயிரம் வாகனங்கள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

இவ்வாறு பெருமளவான வாகனங்கள் இலங்கை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என துறைமுக அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன அனுமதி பத்திரம்-

ddfபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

வரவு செலவுத்திட்ட ஆலோசனைகளில் ரத்துச் செய்யப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வைத்தியர்கள் அரசாங்க அதிகாரிகளின் எதிர்ப்பு காரணமாக மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்-

ffgதிருகோணமலையில் 2006ஆம் வருடம் கடற்கரை முன்றலில் கொல்லப்பட்ட 5 மாணவர்களது 10ஆவது வருட நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு நிலையத்தில் இது நடைபெற்றுள்ளது.

வண.பிதா க.பிரபாகரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்களும் இந்து கத்தோலிக்க மதகுருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து மொரட்டுவைக்கு நேரடி பஸ்சேவை-

busமுதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கான நேரடி பஸ்சேவை புத்தாண்டு தினமான இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொறட்டுவ மற்றும் பேராதனை பல்கலை கழக மாணவர்களின் நன்மைகருதி ஊவா மற்றும் மத்திய மாகாணத்தினூடாக இச்சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் துரை.மனேகரன் தெரிவித்தார். தினமும் காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்திலிருந்து புறப்படும் இப்பஸ்சேவை வவுணதீவு, கறடியனாறு, பதியதளாவ. மஹியங்கனை, பதுளையூடாக கண்டி, பேராதேனிய வழியாக வறக்காப்பொலயூடாக களனி, வெள்ளவத்தையூடாக மொறட்டுவையை அடையுமென அவர் மேலும் தெரிவித்தார். புதிய பஸ் சேவை ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போ பிராந்திய செயலாற்று முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை குடும்பம் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு, இலங்கையர் நால்வர் கைது-

Fஅமெரிக்காவின் – சான் அன்டோனியோ பிராந்தியத்தில் இருந்து இலங்கையர் ஒருவரின் குடும்பத்தை நாடு கடத்துவதற்கு, அங்குள்ள பொது மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றை, இந்த மாதம் நாடு கடத்துவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு, பிராந்தியத்துக்கு பொறுப்பான காங்கிரஸ் உறுப்பினரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சுமார் 5 ஆயிரத்து 500 பேர் மனு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யுக்ரெயின் – ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில் பிரவேசிப்பதன் காரணமாக அங்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4பேரும் அங்குள்ள ரிஸ்ஷா அருவியின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 21 முதல் 46 வயதுகளை உடையவர்கள் என கூறப்படுகின்றது.

பெண்களை பாதுகாக்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் மாற வேண்டும்-

dfdfயாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள, போதைவஸ்துக்கள் இல்லாத பெண்களையும் மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாற வேண்டும் என்று யாழ். உயர் நீதிமன்ற நீதபதி மா.இளஞ்செழியர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியபிரமான நிகழ்வு யாழ். நீதிமன்ற வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சத்திய பிரமாணத்தினை செய்து கொண்ட பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டம் சுபீட்சமுள்ள மாவட்டமாக மாற வேண்டும். போதைவஸ்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற வேண்டும். பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் மாவட்டமாக மாறவேண்டும். பெண்களை பாதுகாக்கும், ரவுடித்தனம், காடைத்தனம் அழிக்கப்படும் மாவட்டமாக மாறவேண்டும். இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் அனைத்து குற்றச் செயல்களையும் ஒழித்து, சமாதானமான, சுதந்திரமான யாழ். குடாநாட்டினை உருவாக்குவதற்கு, நீதித்துறை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒத்துழைத்துக்க வேண்டும். Read more

நீதிபதிகள் இடமாற்றம்-

Posted by plotenewseditor on 1 January 2016
Posted in செய்திகள் 

நீதிபதிகள் இடமாற்றம்-

judegeமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம், களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ங்களுக்கு இன்று தொடக்கம் வேறு நீதிமன்றங்களில் கடமையாற்றிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக பருத்தித்துரை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த என்.கணேசராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.பி.முகைதீன், மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியாக வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.ஐ.எம்.றிஸ்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வாழைச்சேனை நீதிமன்றத்தின் நீதிபதியாக வவுனியா மாவட்டநீதிமன்றத்தின் மேலதிக மாவட்ட நீதிபதியாக இருந்த எம்.றிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய என்.எம்.அப்துல்லாஹ் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய Read more