Header image alt text

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அ.இ.ம.கா

acmc_rishadஇலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. இது விடயமாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது. Read more

இனவாதத்தை மீண்டும் மேலெழுப்பும் ததேகூ – விஜித்த ஹேரத்
 
Kerathமாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் இங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது

Capture12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மூவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்படி, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலையில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் இச் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 14 கோடி பெறுமதியான ஆடைகள் கொள்ளை – ஒருவர் கைது
 
arrestஅனுராதபுரம் – ஹிதோகம பிரதேசத்தில் ஆடை நிறுவனம் ஒன்றில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியுடைய ஆடைகள் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹிதோகம பொலிஸார் பிரதான சந்தேகநபரை ஆடிஅம்பலம் பகுதியில் வைத்து கைதுள்ளனர். கடந்த 02ம் திகதி இரவு குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைதானவர் வசம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 15,774 பெண்களுக்கான ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதனுடன் தொடர்புடைய மேலும் நால்வரை கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மலையக மக்களுக்காக 4000 தனி வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல்

malaiyagamஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்புக்காக, அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா – பூண்டுலோயா – டன்சினன் தோட்டத்தில் நடைபெற்றது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இந்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 404 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக் கல்லை நாட்டி வைத்தார்.

அத்தோடு இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

போதை மாத்திரை விற்பனை – முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
 
policeவாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான மாத்திரைகளும் கஞ்சா சிறிய கட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் இவர் யுத்த காலத்தில் காயமடைந்து கடமை செய்ய முடியாது என்ற மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சம்பளம் பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது.

இவருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பஸ் தரிப்பு நிலையத்தைத் திறக்க எதிர்ப்பு – மட்டக்களப்பு
 
manmunaiமட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. Read more

இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு’ தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

national_congressவடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். Read more

 வடமாகாண முதலமைச்சர் கைது செய்யக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல

CVK sivagnanamஅரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 50வது அமர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு கூறினார். Read more

இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

c.vஇலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது. உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார்.

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது.

மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவர முயன்றுகொண்டிருக்கும் வேளையில், நல்லிணக்கம் ஏற்பட சிங்கள சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

தமது தரப்பால் அரசியல் சாசனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனும் கருத்துக்கள் சில சிங்களத் தரப்பிடமிருந்து வருவது குறித்த கவலையையும் அவர் வெளியிட்டார்.

நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடன் இணைந்துவாழவே தாங்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் மாகாண சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறினார்.

இலங்கையில் மாகாண சபைகள் என்ற ஆட்சி முறை இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் நிலை, புதிய அரசியல் சாசனத்தின் மாற்றப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபை கோரியுள்ளது.

மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல்

sinhala_farmers tamil_farmersஇலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக நேற்று பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது. காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன.
அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்.

அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழலை காவல்துறையினரின் கவனத்துக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டுசென்ற பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பை சமாதானப்படுத்தியுள்ளனர்.

போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது எனவும்.
இதனால் தமது காணி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை

muslimவிக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்

இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாiஷகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷhத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது. Read more

வவுனியா நகர சபை பெரியார்களின் சிலை பராமரிப்புடன், அவர்களின் நினைவு தினங்களையும் நினைவுகூர வேண்டும்-முன்னாள் உப நகர பிதா-

mohanதமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியார்களின் 10 சிலைகளையும் ஒரே நாளில் நிறுவும்போது ஏற்பட்ட பெருமையும் கௌரவமும் இன்று கேள்விக்குறியாகின்ற நிலைமையினை நகரசபை செய்யக்கூடாது என இன்று நடைபெற்ற இளங்கோ அடிகளாரின் நினைவுதினத்தில் உரையாற்றிய புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரியார்களின் சிலைகளை நாம் அந்த பகுதிகளின் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பாடசாலைகள் மற்றும் கோவில் நிர்வாகங்களின் பராமரிப்பில் கையளித்தோம் ஆனால் இன்று நகரசபை அவர்களிடமும் வழங்கவில்லை. தாங்களும் பாராமுகமாக செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது. வருமானம் வருகின்ற நிலையங்களை தங்களின் நிர்வாகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் நகரசபை, எமது கலாச்சாரத்தின் சின்னங்களாக நகரமெங்கும் மிளிர்ந்து காணப்படும் பெரியார்களின் சிலைகளை அவர்களின் நினைவு தினத்திலாவது தூய்மைப்படுத்தி மக்களின், மாணவர்களின் பங்களிப்போடு கௌரவப்படுத்த வேண்டியது நகரசபையின் கடமை. நகரசபைக்கு உட்பட்ட மயானங்கள், தாய்சேய் பராமரிப்பு நிலையங்கள், பொது நூல் நிலையம், பொதுப் பூங்கா மற்றும் நகரசபைக்கு கையளிக்கப்பட்ட கட்டிடங்கள் என்பவற்றின் பெறுமதியும் பயனும் கருதி அவற்றினை உரிய வகையில் பாதுகாக்க வேண்டியதுடன், மக்களின் பணத்தில் இயங்கும் நகரசபை மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற கூடிய சூழ்நிலையை முன்னெடுக்க வேண்டும் எனவும், மக்கள் சேவையில் மகிழ்ச்சி காணுவோம் என மகுடத்தை உருவாக்கிய நாங்களும் எமது அமைப்பும் என்றும் நகரசபையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்போம் எனவும் கூறினார்.

யாழில் மே மாதம் 3000 வீட்டுத் திட்டம் ஆரம்பம்-

housing schemeயாழ். மாவட்டத்திற்கு 39 ஆயிரம் வீட்டுத் தேவைகள் இருப்பதாகவும், முதற்கட்டமாக மூவாயிரம் வீட்டுத்திட்ட வேலைகள் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி பயனாளிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறித்த வீடுகள் வழங்கப்படும். அத்துடன், யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்திற்கு அமைவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். சுமார் 8 இலட்சம் பெறுமதியான புதிய கல் வீடுகளை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மூவாயிரம் வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேவேளை, பயனாளிகள் தெரிவில் குறைகள் இருப்பின் பிரதேச செயலாளர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், எதிர்வரும் மே மாதத்திற்குள் மூவாயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள்-

19.04.2016 singam funeral batticaloa (3)அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் நேற்றுமாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு புதுநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கோ.கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் பிரதிநிதி பரதன்,

புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் (அமல்), வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), புளொட்டின் – மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நிஸ்கானந்தராஜா (சூட்டி), அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சிவநேசன் (பத்தன்) மற்றும் தோழர் கேசவன் உள்ளிட்ட கழகத்தின் பல மூத்த உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், மட்டக்களப்பின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள்;, பொதுமக்கள் என பெருந்தொகையிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள். இரங்கல் உரைகள் கழகத் தோழர் நிமலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமரர் சிங்கம் அவர்களின் உடல் மாலை 5.00 மணியளவில் புதுநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. Read more

யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழக நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

rajakiramam 18.04 (6)யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் வேலன் சின்னக்கிளி (செல்லக்கிளி) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு

அவரது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட இறுதி நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும், கலை விழாவும் நேற்று முன்தினம் (18.04.2016) மாலை 4மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவு-(படங்கள் இணைப்பு)

Tellipalai 17.04 (8)யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் கடந்த 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் மகளிர் இல்ல நிர்வாகத்தினர், பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியோர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம்-

poojitha jayasundaraஇலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப்புச் சபை தெரிவு செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மூவர் வெலிகடை சிறையில் தடுப்பு-

jailமுத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்கள் மாலைதீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இளைய சகோதரன் 2005ல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்தபோது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து 6ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலைதீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது சகோதரன் உட்பட மூன்று இளைஞர்களும் மாலைதீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகியோரே இந்த மூவருமென கூறப்படுகிறது.

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

??????????மட்டக்களப்பு சிவபுரத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியான முறையில் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று நடைபெற்று பின் அவர் கடமை புரிந்த மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. Read more