Header image alt text

accident (3)மட்டக்களப்பு ஏறாவூர் களுவன்கேணி, கோறளங்கேணியில், முச்சக்கர வண்டியொன்று குடைசாய்ந்ததில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், களுவன்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுஜித் (வயது 22) என்பவரே, தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, உயிரிழந்துள்ளார். Read more

norvayநோர்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது. இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் ‘உலகின் முதல் கப்பல் சுரங்கம்’ உருவாக்கப்படவிருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது. Read more