Header image alt text

tnaபலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சரவணபவன், தர்மலிங்கம சித்தார்த்தன் உட்பட இராணுவம், கடற்படை, விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். Read more

kuppaiஇலங்கையிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் கழிவுகளை அகற்றும் பணி அத்தியாவசிய சேவையாக இருக்கும்மென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபிரகடனம் செய்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இது தொடர்பான சிறப்பு கெஸட் அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 17வது சரத்தின் கீழ் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. Read more