முதலாம் தர அனுமதி தொடர்பில் மனித உரிமை மீறல்களில் மேற்கு, மத்தி மற்றும் தென் மாகாண பாடசாலைகள் பட்டியலின் உயர் நிலையில் உள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் குழுவின் தலைவி டொக்டர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும், இந்தப் பாடசாலைகளில் சிலவற்றுக்கு எதிராக, திரும்பத் திரும்ப முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய மகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு எதிராக இவ்வருடம் மாத்திரம், 80 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more