முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்க படையினர் கேட்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் வழங்கும் எனவும் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பில் 24ம் திகதி பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்காக யாழ்.வந்த அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம் கேப்பாவிலவு மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு கிராமத்தில் படையினரிடம் உள்ள 399 ஏக்கர் நிலம் மக்களிடம் வழங்கப்படவுள்ளது. Read more