Header image alt text

PRO01விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மத்தி, வன்னியர் வீதியைச் சேர்ந்த திருமதி கருணாகரன் சந்திரேஸ்வரியின் குடும்பத்தின் வாழ்வாதாரத் தொழிலாகிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 31,050.-  பெறுமதியில் மின்சார நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றையும், அதற்குரிய உபகரணங்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட் அரசியல் பிரிவு) சுவிஸ்கிளைத் தோழர்களான செல்வபாலன், ராஜேந்திரம், தீபன்; ஆகியோர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர். Read more

oddusuddan1117/04/2017 அன்று ஒட்டுசுட்டான் ஆதிகணபதி அறநெறி பாடசாலையின், புதுவருட விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர் கௌரவ க.சிவநேசன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளார் அனிருத்னன, வைத்திய அதிகாரி நிரேக்கா பிரகலாதன்  கலாச்சார உதியோகத்தர் கிரிசாந்தி, கிராமசேவையாளர்கள் சோபனா & மேஹலா,  மற்றும் அயல்பாடசாலை அசிரியர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

Read more

P1430270யாழ். கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மகளீர் தின நிகழ்வு இன்று (17.04.2017) திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் கைதடி மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக  வைத்தியக்கலாநிதி திருமதி சி.பஞ்சராஜா (சிரேஸ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலை), திருமதி. த.சங்கீதா (முகாமையாளர், இலங்கை வங்கி, கைதடி), ஆகியோரும்,

Read more