புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள ‘அன்பு’ சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் மதியநேர உபசரணைச் செலவினை பூர்த்திசெய்யும் வகையில் ரூபா 15000ஃ- நிதியுதவி வழங்கிவைப்பட்டுள்ளது.ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர் மற்றும் சிறுவர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (25.04.2017) நடைபெற்ற இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பொருளாளரும், வடமாகாணசபை உறுப்பினருமான க.சிவநேசன்(பவன்) மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் (முல்லைத்தீவு மாவட்டம்) திரு. கனக தவராசா ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
(முதற்கட்டமாக மன்னார் பட்டித்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தோம் முதியோர் இல்லத்திற்கு 18,000 ரூபா நிதியுதவி (08.04.17)வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்திற்கு 15.000ரூபா உதவி (25.04.2017) வழங்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக முத்தையன்கட்டு அன்பு சிறுவர் இல்லத்திற்கு 15.000ரூபா உதவி வழங்கப்பட்டுள்ளது.