ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு விஜயராம பகுதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின்னர் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கச் சென்றுள்ளனர். இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துள்ளார். Read more








