Header image alt text

திருகோணமலை நிலாவெளி, பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பூஜை வழிபாடொன்றிற்காக வந்து அங்கு குளத்தில் தாமரை இலை பறித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். ஊர்காவற்துறை பகுதியில், உணவு ஒவ்வாமையால், 98 பேர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே இவ்வாறு, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில், அந்தோனியார் ஆலய நிர்வாகத்தால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை உதவிப் பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்றுடன் இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவு செய்கின்றார்.

கடந்த வியாழக்கிழமை மாலை அவர் தமது விஜயத்தை ஆரம்பித்தார். வெள்ளிக்கிழமை முதல் ஜனாதிபதி, பிரதர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு பிரதானி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். இந்த சந்திப்புகளின் போது அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. Read more

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முடியும் என்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார, வர்த்தக தொடர்புகளுக்கு புதியதோர் பலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Read more

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 19.3 சதவீத அதிகரிப்பாகும்.

சீனா, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 235,618 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி எம்.என். பிதுஷினி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின், புதிய செயலாளராக சந்தியா விஜயபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் ஆரையம்பதி, காங்கேயனோடை, எல்லை வீதியில் இரண்டு வீடுகளிலிருந்து, நேரம் குறித்து வெடிக்கக்கூடிய இரண்டு குண்டுகள், கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர், சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்றுமாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த 28 வயதுடைய அருள்ராஜ் ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை, அவரது தாய் மற்றும் மனைவி ஆகியோர் அடையாளம் காட்டினர். Read more

கிளிநொச்சி தனியார் சிற்றூர்தி உரிமையாளர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக முறிகண்டி தொடக்கம், பரந்தன் நோக்கி செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையில் ஈடுபடுபவர்களை கடந்த சில தினங்களிற்கு முன்பும், தனிநபர்கள் தாக்கியதாக தெரிவித்தே அந்த பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார்.

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.   Read more