Header image alt text

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமற் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்­கென நிய­மிக்­கப்­பட்ட ஆணை­யா­ளர்­களின் முத­லா­வது கூட்டம் இவ்­வாரம் கொழும்பில் நடை­பெறும் என்று ஆணை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான நிமல்கா பெர்­ணான்டோ நேற்று தெரி­வித்தார்.

காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் கூட்டம், தலைவர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் கொழும்பு நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தில் நடை­பெறும் என்றும் காணா­மற்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் இயங்­கு­வ­தற்­கான கட்­டடம் ஒதுக்­கப்­பட்ட பின்னர் அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான ஊழி­யர்கள், அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டுவர் எனவும், பின்னர் காணாமற் போனோர் அலு­வ­லகம் வெகு­வி­ரைவில் இயங்க ஆரம்பிக்குமெனவும் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.