Header image alt text

தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே, கழகத் தோழர்களே, ஆதரவாளர்களே, தோழமைக் கட்சி உறுப்பினர்களே…

சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் “மேதின ஊர்வலத்தில்” கலந்து கொண்டு ஜனநாயக போராட்டத்துக்கு வலுசேர்ப்போம். சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்ப்போமாக.

சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, Helvetiaplatz இல் ஆரம்பித்து, Bürkliplatz இல் முடிவடையும்..
தொடர்புக்கு… 078.6461681, 078.9167111, 079.7333539, 079.9401982, 079.9297719, 076.5838410, 076.4454112, 077.9485214

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை

இன்றைய தினம் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் இடம்பெற்ற “சர்வதேச இலங்கையர் டயஸ் போரா” (INSD) கூட்டத்தில் இலங்கையின் அரசியல், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயற்பட வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது .

இவ் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த புலம் பெயர் தமிழர்களுடன் பெரும்பான்மையின செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கு கொண்டனர். இவர்களுடன் ஜேர்மனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டனர்.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை பொறுப்பாளர் தோழர் பவானந்தன் தலைமையில் கழக தோழர்களும், புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் தோழர் செல்லத்துரை ஜெகநாதனும் பங்கு கொண்டிருந்தனர்.
Read more

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதார அமைச்சர் ரொபேற்றோ மொராலே இதனைத் தெரிவித்துள்ளார். Read more

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர் Read more

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதென, வளாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றை பிரதிஸ்டை செய்வதற்கு, சிங்கள மாணவர்கள் முயன்றதால், வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடுமாறு, வளாகத்தின் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். Read more

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று நாளை நடத்தப்படவுள்ளது.

பிராந்திய ஏதிலி வலைப்பின்னல் குழுவொன்றினால் பென்டிகோவில் உள்ள ஹாக்ரேப்ஸ் மால் இற்கு முன்னால் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த குடும்பம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் அபாய நிலையை எதிர்நோக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் க்ரிஸ் குமின்ஸ் தெரிவித்துள்ளார். Read more

யுத்த காலத்தில், பலாலி விமானப்படை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் காணிகளில், 3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றன என, பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23,533 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. Read more

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம், முட்டாள்தனமான இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. Read more

இலங்கை இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷஹிட் காகான் அப்பாசிக்கும் இடையே அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விரிவாக பல விடங்கள் கு

றித்து ஆராயப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்றையதினம் கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது.

2010ம் ஆண்டு எம்.வீ.சன்சீ கப்பல் ஊடக ஏதிலியாக கனடா சென்ற அவர், கடந்த ஆண்டு கனடாவின் தொடர் கொலையாளியான மெக் ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் ஏதிலி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு, அவரது தொழில் அனுமதியும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலுக்கு உட்படாதிருக்கும் நோக்கில் தலைமறைவாகி இருந்தார். Read more