Header image alt text

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவர் தொடர்பான வழக்கில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், ஐரோப்பிய நாடுகளில் அதிகபடியான ஏதிலிகள் உள்வாங்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியாவைத் தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தினால் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் வழக்கை விசாரணை செய்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சகாய பாதுகாப்பு பெற முடியும் என்று அறிவித்திருந்தது. Read more

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய, சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்க, கட்சி தீர்மானித்துள்ளதாக, சு.கவின் உப செயலாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நேற்று இரவு இடம்பெற்ற, சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்படி 16 பேரும், கட்சியை விட்டு விலகுவது தொடர்பில், ஒரு வார்த்தையேனும் பேசவில்லையென்றும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, அமைச்சர் குறிப்பிட்டார். Read more

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு மற்றும் மீள்க்குடியேற்றம் தொடர்பில் கருத்துக் கூறுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை விடுவிப்பது குறித்து முப்படைத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதனால் தாங்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக ஏற்கெனவே பொன்னம்பலம் ஞாபாகர்த்த வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை இராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின்னர் கையகப்படுத்தி அவற்றைத்தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். Read more

மாகாண சபைத் தேர்தலை உரிய தினத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றை தெரிவுசெய்து பாராளுமன்றம் அங்கீகரிக்குமாயின் ஏற்கனவே கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பரில் முடியவுள்ள மூன்று மாகாண சபைகள் உள்ளடங்கலாக ஆறு மாகாண சபைகளின் தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்த முடியும் என்றும் அவர் கூறினார். Read more

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன. இதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. Read more

வட மாகாணத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரின் வசமிருந்த 56,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். ஏனைய பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். Read more

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read more

தமிழகத்தில் தற்போது 95 ஆயிரம் ஈழ ஏதிலிகள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மீள்க்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் தகவல்களில் இந்த விடயத்தை அறியக்கூடியதாக உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 193 ஈழ ஏதிலிகள் தங்கியுள்ளனர்.

110 ஏதிலிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 916 குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 436 ஏதிலிகளும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் 34 ஆயிரத்து 757 ஏதிலிகளும் வசிக்கின்றனர். Read more