இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் எல்லாம் உதவியளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங், இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தொட்டையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா ஏற்கனவே பல்வேறு உதவிகளையும், முதலீட்டு வேலைத்திட்டங்களையும் வழங்கியுள்ளது. Read more