Header image alt text

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான பூகோள பருவகால மீளாய்வு அறிக்கை நேற்றையதினம் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். Read more

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

தனது பதவி நீக்கத்திற்கு காரணம் தனது வயதெல்லையே என்று பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று தனக்கு கிடைத்ததாக ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.

26 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்த உத்தரவொன்றிற்கு அமைய குறித்த வழக்கு இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. முதலில் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த வழக்கு சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது. Read more

கத்தி முனையில் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவமொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிபத்கொடயிலுள்ள தனியார் வங்கியொன்றிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாதோர் கத்தியைக் காட்டி குறித்த தனியார் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். Read more

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணை ஒன்றிற்காக விமல் வீரவன்ஸ ஆஜராகாத காரணத்தினால் நேற்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழுத்து வெட்டப்பட்டு காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய சிவநாதன் தவரூபன் எனும் நபரே உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸாரிடம் கூறியுள்ள உயிரிழந்தவரின் தாய், தனது மகன் சில நாட்களாக ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். Read more

கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், Read more

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார நிர்வாக நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.

இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாத காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைவாக அரசியல் கட்சிகளுக்கு சபைகளை அமைக்க முடியும். Read more

மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை கண்டு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் கண்ணீர் சிந்தி இருந்தனர்.

யாழுக்கு நேற்று (19) விஜயம் செய்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வயோதிப சகோதரிகள் இருவரும் கதறி அழுதமை அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருந்தது. Read more

காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அலுவலகம் புலிகளின் சார்பில் இயங்கவிருப்பதாகவும், வடக்கு கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பூகோள இலங்கையர்கள் பேரவை என்ற புலம்பெயர்ந்த அமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது. Read more