ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 30 இன் கீழ் 1 மற்றும் 34ல் கீழ் 1 ஆகிய இரண்டு பிரேரணைகளின் பரிந்துரைகளும் முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான பூகோள பருவகால மீளாய்வு அறிக்கை நேற்றையதினம் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரித்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். Read more