தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதையடுத்து, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெற்றுக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணை ஒன்றிற்காக விமல் வீரவன்ஸ ஆஜராகாத காரணத்தினால் நேற்று அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.