Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உள்ளாட்சி சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர்கள், உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் தோழர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் சந்திப்பில். Read more

dan news

சிறுபான்மை மக்களை இன்றும் சிறுபான்மையாக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் திட்டம் என்று வடமாகாண சபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

Posted by DAN News on Donnerstag, 15. März 2018

நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வொன்றுக்காக திருகோணமலை சென்றிருந்த அவர், இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தார். காணாமல் போனோர் விடயத்தில் உரிய நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலில் 73.9வீதம் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். Read more

பளையில் நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் புலிபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர் பெண்ணொருவரின் சடலம் ஆற்றில் கரையொதுங்கி உள்ளதைக் கண்டு கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உடல் சிதறுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய செல்லையா கந்தசாமி என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். Read more

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.
இவரின் இறுதி நிகழ்வு இன்று (18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. Read more