Header image alt text

இந்தியாவின் அந்தமான் தீவில் வசிக்கும் 48 இலங்கை தமிழர்களின் குடும்பங்களுக்கு காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையில் இருந்து பல தமிழ் குடும்பங்கள் ஏதிலிகளாக அந்தமான் – நிக்கோபர் தீவில் குடியேறினர். Read more

நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் மீது மன்னார் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதடைந்ததுடன், சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை பயணித்த புகையிரதம் மீது, Read more

கெரவலப்பிட்டிய, அவரகொட்டுவ பிரதேசத்தில் உள்ள இரசாயண தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தற்போது தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு மணி நேரமாக இந்த தீ இருந்துள்ளதுடன், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அதிவேக புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரத கடவையில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூவரில், கந்தசாமி சந்திரகுமார் (வயது 29) மற்றும் இராஜகோபால் கிரிசாந் (வயது 27) ஆகிய இருவருமே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். Read more

சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது.

அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆகஸ்ட் 30-க்குள் சரணடைய வேண்டும் என்றும் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் மலேசிய அரசு எச்சரித்துள்ளது. Read more

அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் எழுதிய ‘யார் இந்த இராவணன்’ நூல் வெளியீட்டு விழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

மத்தளை ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை இந்திய விமான நிலைய அதிகார சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித யோசனைகளும் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் ஜயந்த் சிங் நேற்றைய இந்திய சட்டமன்ற அமர்வின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத்தளை சர்வதேச விமான நிலையத்தை கையகப்படுத்துவதற்கு இந்திய அரசிற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபைக்கு ஏதேனும் திட்டங்கள் காணப்படுகின்றதா என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புனம் மஹஜித் நேற்று கேள்வி எழுப்பினார். Read more

வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனை, அந்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா? என்பது தொடர்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது. Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து அது இறுதியில் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. மேலும், இன்று காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையில் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.