திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்றுகாலை கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேகநபர்கள் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more
பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின், 2017ம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையின் பிரகாரம், முப்படையினரும் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.
மன்னார் ´சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 42ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த குழு கொழும்புக்கு வரவுள்ளது.
கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க முன்வந்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.