கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிக்கோரி, இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்துக்குள் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். Read more
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்து பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து கைதான இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்தீன்(வயது 25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மூன்று அரசியல் கைதிகள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வருட புனர்வாழ்வின் பின்னர் இவர்கள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று யாழ். கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
மட்டக்களப்பு – பெரியபுல்லுமலையில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டையிலுள்ள கச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காந்தி பூங்காவில் தான் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்தார்.