இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக நேற்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டபோதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாமென காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர். Read more