வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரினால் குறித்த வழக்கு தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
இருப்பினும் குமுதினி விக்கிரமசிங்க இன்று வழக்கு விசாரணைக்கு கலந்து கொள்ளாததால் குறித்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி ஜனக் டி சில்வா உத்தரவிட்டுள்ளார். வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். Read more