Header image alt text

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பட்ட நிதியினூடு நேற்று 17-2-2018 காலை 10.30 மணிக்கு யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் வீதி அபிவிருத்திப்பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கயதீபன் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்சன் வலிதெற்கு பிரதேச்சபை உறுப்பினர்கள் கரிகரன், கெங்காதரன், வலன்ரெயின் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச்செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத்தன்மைகள் தொடர்பாகவும் அத்தீர்மானங்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற தடைகள் பற்றியும் மக்களுக்குச் சிறந்த பலனைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய விதத்தில் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. Read more

கோப்பாய் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் இரண்டாம் கட்டமாக 15 வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் கோப்பாய்த் தொகுதிக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பரிந்துரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இருபாலை தெற்கு ஞானவைரவர் கோவில் வீதி, இருபாலை தெற்கு ஆரம்ப சுகாதார வைத்திய நிலைய வீதி, இருபாலை தெற்கு சிங்கராயர் லேன், இருபாலை கிழக்கு ஏ.ர் லேன், உரும்பிராய் வடக்கு இருளன் வீதி, உரும்பிராய் வடக்கு மடத்தடி வீதி, உரும்பிராய் வடக்கு நிலாமகளீர் வீதி, உரும்பிராய் கிழக்கு தபால் பெட்டி வீதி, உரும்பிராய் கிழக்கு அயட்டைய புலம் வீதி , அச்சுவேலி தெற்கு பயித்தோலை வீதி, கோப்பாய் மத்தி கண்ணகி அம்மன் வீதி, உரும்பிராய் மேற்கு மூன்று கோயிலடி வீதி, உரும்பிராய் தெற்கு செல்வபுரம் 2ம் ஒழுங்கை, கோப்பாய் வடக்கு கயட்டபுல வீதி, நீர்வேலி வடக்கு பண்ணாலை கிழக்கு வீதி ஆகிய 15 வீதிகளின் புனரமைப்புப் பணிகளை இரண்டாம் கட்டமாக (14,15,16)ஆகிய தினங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more

நெடுங்கேணி சேனைப்புலவு விவசாய போதனாசிரியர் பிரிவில் மல்லிகை செய்கை தொடர்பான வயல் விழா 17.12.2018 அன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி ரி .லிங்கநாதன் ,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி . சகிலாபானு மற்றும் விவசாயபோதனசிரியர்கள் , விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் ,பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . Read more