மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, வட்டகச்சி பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். வட்டகச்சி, கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான இராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். Read more
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை யார் பெரும்பான்மையை நிரூபிக்கின்றார்களோ அவர்களே ஆட்சியமைக்க தான் அனுமதி வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.