Header image alt text

மாகாண சபை தேர்தலை நடத்துவதுவது தொடர்பான சட்டத்திட்டங்கள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பொன்றை எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் வைத்து ஊடகவியளார்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலை அவசரமாக நடத்துவதற்கு தேல்தல்கள் ஆணையகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அதற்காக நீதிமன்றத்தின் வழிகாட்டல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு அலகபுரி, இராமநாதபுரம், வட்டக்கச்சி பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கருப்பையா சத்யவேல் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் குளிக்க சென்ற போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.