Header image alt text

ஐநா அமர்வு முடிந்துள்ளது. இரண்டு வருட கால அவகாசம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம் என்று அரசு முரண்பாடான நிலைமையைக் கொண்டிருக்கின்றது. இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: அரசாங்கத்தின் நிலைப்பாடு அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் நான் நம்பவில்லை அவர்கள் தங்களுடைய இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் என்று. யரராக இருந்தாலும் தேசிய அரசாங்கம் என்று சொல்லலாம். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறோம் என்று அவர்கள் எதையும் கூறலாம். ஆனால் அவர்கள் மாறமாட்டார்கள். Read more

இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது. Read more

பிரதமரால் எல்லை நிர்ணய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்பட்டால் விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அந்த அறிக்கை ஜனாதிபதியால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டதன் பின்னர் மாகாண சபை சட்டமூலத்தை திருத்தி முரண்பாடு உள்ள பிரிவுகள் தவிர ஏனைய பிரதேசங்களுக்கு தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது. Read more

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த அரச அச்சக திணைக்களம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வௌியிடப்பட்டுள்ளது