 அம்பாறை, சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகின்றது.
அம்பாறை, சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள், தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் குடும்பத்தினரே உயிரிழந்துள்ளனர் என்றும் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும் குழந்தையும், சஹரானின் மனைவியும் மகளும் என்றும் தெரியவருகின்றது.
காத்தான்குடியில் இருந்து இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்ட சஹ்ரானின் சகோதரி ஹாஷிம் மதனியா, சஹ்ரானின் மனைவியும் மகளும் காயமடைந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
