ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 375 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 360 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 06 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Read more
புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இளைஞர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய, தல்காஸ்பேவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்ய சுமார் 7 இலட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைகழக கல்விசாரா பணியாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத்தலைவர் டம்மிக எஸ்.பிரியன்த இதனை தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 23 ஆயிரத்து 372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியது.