மன்னாரில் பொலிஸார் உள்ளிட்ட இருவர் 180 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சொகுசு வாகனமொன்றில் குறித்த மூவரும் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த வாகனத்தை நிறுத்துமாறு கடற்படையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று புத்தளம், வண்ணாத்திவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்கும் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.