மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ-பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

பாதிப்படைந்திருந்து ரயில்வே சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. நேற்று மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.