வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடமையாற்றும் 120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில், வேறு பிரிவுகளுக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், யாழ்ப்பாணம் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பு உள்ளதென்று, சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே, குறிப்பிட்ட 120 தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.