கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கால் பகுதி எலும்புத் துண்டுகள், சீருடைகள், பற்றிகள் ஆகியன நேற்று (16) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு, பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.