கைதிகள் விடுதலை பெறுவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை-அமைச்சர் விஜயதாச-

wijayadasa rajapakseபயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 204பேர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56பேர் குற்றவாளிகள், 124பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன என நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வவுனியா அரச அதிபர் நியமனத்தில் அதிருப்தி-

tnaவவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த புஸ்பகுமார நியமிக் கப்பட்டு, அவர் செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கடமையேற்றுக் கொண்டுள்ளார். அதனைத் தாம் எதிர்ப்பதாகவும் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது. இதனைத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. தமிழ்க் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்தும் இதில் கலந்து கொண்டன. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்கள் கூறியதாவது:- முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் தாம் பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமது ஆட்சேபனையையும் நியாயங்களையும் எடுத்துக் கூறிய பின்னரும் கூட மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.
இந்த ஒரு சிறிய விடயத்திலேயே எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகையில் ஏனைய விடயங்களில் சாதகமான முடுவுகள் வரும்என்று தொடர்ந்தும் பொறுமையுடன் நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் தமிழ் மக்களையும் இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப் போலவே ஏமாற்றி வருவதாகவே கருத வேண்டியுள்ளது. மிகமிக சிறிய கோரிக்கைகளே நிராகரிக்கப்படுகையில் நல்லிணக்க செயற்பாட்டு சமிக்ஞையின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் பதவியாலும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியாலும் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயன் விளையப் போகின்றது என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே, புதிய அரசாங்கத்துக்கு அளித்துவரும் நல்லெண்ண ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள்பசீலனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராயவுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ந. சிவசக்தி ஆனந்தன், வைத்திய கலாநிதி சி. சிவமோகன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ம. தியாகராசா, இ. இந்திரராசா, எம். பி. நடராசா, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ப. சத்தியலிங்கம், தமிடிழ விடுதலைக்கழகம் (புளொட்) சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் இதனை வலியுறுத்தினர்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கூட்டறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டுள் ளதாவது:- ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டில் புதியதொரு வரலாறு எழுதப்பட்ட நாளாக தற்போது அனைவரும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே ஜனவரி எட்டாம் திகதி நிகழ்ந்த மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களே பிரதான பங்காளிகள்.

இந்த மாற்றத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவைப் பகிரங்கமாக வெளியிட்டி ருந்தது. குறிப்பாக, காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து இடம்பெயர்ந்த மக்களை துரிதகதியில் மீளக்குடியேற்றல் உள்ளிட்ட எமது மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு, ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் எம்மால் கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

நிபந்தனை அற்ற ஆதரவளிப்பதன் ஊடாக எமது விடயங்கள் அனைத்தும் காலக்கிரமத்தில் நிறைவேறும். அவற்றை பக்குவமாக முன்னெடுத்து எமது நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா நம்பிக்கையும் அளித்திருந்தார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவு என்பது ஆட்சி மாற்றத்தின் பின்னராவது தமிழ் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளில் ஒரு சிலவற்றையாவது தீர்ப்பதற்கு வழியேற்படுத்தும் என்று நம்பியிருந்தபோதிலும் நல்லாட்சி மலர்ந்து பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பிரச்சினைகளை நோக்கிய கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வ மான பதில்கள் கூட கிடைக்கவில்லை. கடந்த பத்து மாதங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றி தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். அப்போதெல்லாம் எங்களுக்கு விரைவில் அதனை நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது.

அந்த கருமங்கள் நிறைவேறாதபடியால், கடந்த 21-11-2015 அன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக் கையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி கியஸ்கந்தராஜா ஆகியோர் பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

மேற்படி விடயங்கள் குறித்தும் குறிப்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மாற்றம் தொடர்பாக விவாதித்த போது, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சரை அழைத்து குறித்த விவகாரம் தொடர்பில் வினவினார்.
இந்நிலையில், வவுனியாவின் அரச அதிபராக மறுபடியும், சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நியமனத்துகக் எமது ஆட்சேபனையை தெரிவித்ததன் பின்னர் பிரதமரின் முன்னிலையில் அமைச்சர் எங்களிடம் கால அவகாசம் கேட்டுக்கொண்டார். அதற்கு நாங்கள் உடன்படாமையினால் 23ஆம் திகதி குறித்த அரசாங்க அதிபரை மீள அழைத்து தமிழர் ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்தார்.

ஆனால், 24-11-2015 அன்று குறித்த சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தவர் வவுனியாவில் கடமையேற்றுக் கொண்டுள்ளார். இந்த நியமனமானது நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

இதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த போது நாம் அவர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் தெரிவித்து விடுதலையை வலியுறுத்தினோம்.

குறிப்பாக இரா. சம்பந்தன் நேரடியாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அதன்போது, எமது தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்றே தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கும் இரு பிரதான கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் வேண்டுகோள் அரைகுறையாக பரிசீலிக்கப்பட்டு அவர்களின் விடுதலைக்கான நிபந்தனைகளையும், புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான நிபந்தனைகளை யும் விதித்து அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினைகளைத் திசைமாற்றி சிக்கலுக்கு உள்ளாக்கியிருக் கின்றார்கள். ஆகவே அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து எமது நல்லெண்ண ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதா? என்று மீளப்பரிசீலிக்க வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.