protest (1)கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில், திருகோணமலையிலும் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து மேற்படி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக இப்போராட்டம் ஆரம்பித்துள்ளது. மேற்படி போராட்டம் காலை 9.30 முதல் மாலை 4 மணி வரையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.