Header image alt text

IMG_1264பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி திரு. சதீஸ்குமார் தலைமையில் நேற்று முன்தினம் (15.01.2017)மாலை 4.30 மணிக்கு நெடுங்கேணி பெரியமடு பொதுநோக்கு மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான திரு ஜி.ரி லிங்கநாதன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more

former LTTEகிளிநொச்சியில் உள்ள, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம், முன்னாள் போராளிகள் மகஜர் கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள், ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர்.

அத்துடன், வேலைவாய்ப்பு கோரி, ஆளுநருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன்போது, கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொண்டராசிரியர்களுக்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும் மிக விரைவில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

IMG_1086தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “youth got talent”  மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், காத்தார் சின்னக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உதயதாரகை இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவுபெற்ற மைதான புனரமைப்பு திறப்பு விழா அண்மையில் உதயதாரகை இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.அருண்குமார் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் திரு செ.மயூரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் சேவை அதிகாரி திரு அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ.கேசவன் Read more

sahalaசட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஜேர்மனியின் முதலாவது துணை ஜனாதிபதி றெயின்கோ ல்ட் பொக்லட் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் போல் றூபிக் ஆகியோரை சந்தித்து நட்புறவு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை மியூனிச் பெபேரியா பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இருதரப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ஜனநாயகவாதிகளின் சங்கத்தின் (IDU) 2017 ம் ஆண்டுக்கான நிறைவேற்று கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாகல ரத்னாயக்க ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ளார்.

lankan in canadaபுலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார். மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார்.

குறித்த நபர் புலிகளுக்காக நிதி சேகரித்தார் எனவும் தன்னார்வமாகவே புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் கனடாவின் குடிவரவு சபை ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து போராடி வந்தார். எனினும் அவரை நாடு கடத்துமாறு கனடாவின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

vavuniyaவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் இன்றையதினம் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்தின் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு, நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. Read more

train strikeசம்பளம் குறித்த கோரிக்கையினை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன. இதன்கீழ் ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.