policeநாடு முழுவதிலுமுள்ள பிரதான நகரங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தில் அதிகளவில் மக்கள் நகரங்களுக்கு வருகை தருகின்றமையினால் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.