நியூயோர்க் நகரிலுள்ள கிழக்கு ஆற்றுக்கு அருகில் ஹெலிகொப்டரொன்று தரையிறங்க முற்பட்ட போது நேற்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இது வரையில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

இந்தக் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில் 6 பயணிகளும், விமானியொருவரும் பயணித்துள்ளனர். இந்நிலையில் விபத்தின்போது ஐந்து பேர் பலியாகியுள்ளனர். விமானி ஒருவாறு உயிர் பிழைத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.