 2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
5 ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஜனாதிபதி தேர்லுக்காக கட்டுப்பணம் பொறுப்பேற்கும் பணி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது. நேற்று வரையில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
