கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), இன்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைதுசெய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவினால், கடந்த 24ஆம் திகதியன்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இப் பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு, ராஜித எம்.பியின் சட்டத்தரணிகளால், இன்றைய தினமும் மூன்றாவது முறையாக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, அந்த மனுவை நிராகரித்து, அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.