யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014

punnalaikattuvan  (1)யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-2014 நேற்று (24.10.2014) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு. த.லோகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரூபா உதயரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி கமலினி பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் (1,50,000) கொடுத்து வாங்கிய மேலைத்தேய வாத்தியக் கருவிகளை (பாண்ட் வாத்தியக்கருவிகள்) ஆயக்கடவைப் பிள்ளையார் கோவிலில் வைத்து திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய அதிபரிடம் கையளித்தார். இதன்மூலம் முதற்தடவையாக இப்பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டு பாண்ட் வாத்தியக்குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆசியுரையினை திரு. சிவஸ்ரீ சோ.கெங்காதரக்குருக்கள் அவர்கள் வழங்க, உப அதிபர் திரு. சி.முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் து.லோகேஸ்வரன் (லோகன்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

punnalaikattuvan (8)இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இன்று மாறுபட்டு மாணவர்களிடையே ஒரு போட்டிப் பரீட்சையாகவே மாற்றப்பட்டிருக்கின்றது. அது இன்றைக்கு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் அழுத்தத்தைக் கொடுக்கின்ற ஒரு விடயமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இப் பரீட்சையானது பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே இருக்கக்கூடிய பாடசாலைகளில் வாய்ப்பு வசதியற்ற திறமையான மாணவர்களுக்கு நகரப் பகுதிகளிலுள்ள பெரிய பாடசாலைகளில் வாய்ப்பளித்து அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடனேயே ஆரம்பிக்கப்பட்டது. அந்த நோக்கம் இன்று முற்றுமுழுதாக முறியடிக்கப்பட்டு ஒரு போட்டியாகவே இடம்பெற்று வருகின்றது. இதை சீர்படுத்த வேண்டும். அதாவது எந்த நோக்கத்திற்காக புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவுசெய்யக்கூடிய வகையிலே அது நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

punnalaikattuvan (10)punnalaikattuvan  (11)punnalaikattuvan (12)punnalaikattuvan  (6)punnalaikattuvan (7)punnalaikattuvanpunnalaikattuvan (15)punnalaikattuvan (19)punnalaikattuvan (2)punnalaikattuvan  (4)