Header image alt text

சமந்தா பவர் வட மாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேச்சு-

vignes samanthaதமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். சமந்தா பவருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், எமது சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார். இலங்கையில் ஜனநாயகத்தினை வரவழைக்க வேண்டும் என்பதுடன், அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசப்படுவதாகவும், தம்மாலான சகல உதவிகளையும் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். Read more

எட்டு புலம்பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம்-

governmentநாட்டில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலேயே சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் நிதி உதவி வழங்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நபகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த பட்டியலில் இருந்த 08 அமைப்புகள் மற்றும் 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகள் மற்றும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் செய்யத மீளாவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த திருத்தம் அடங்கிய 1941ஃ44 என்ற இலக்கமுடைய அதி விசேட வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் விதம் தொடர்பில் அவதானம் செலுத்தபட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். Read more

கற்சிலைமடு அ.த.க பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-

IMG_2933முல்லைத்தீவு, கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் 11மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகணசபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மேரிகமலா குணசீலன், பேராறு பாடசாலையின் அதிபர் திருமதி சிவநேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். புhடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மாசிலாமணி மகேந்திரன் (LONDON) அவர்களால் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது வடமகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்கள், தேர்ச்சிபெற்ற மாணவர்களை வாழ்த்தியதோடு, அவர்களை வழிநடத்திய அதிபர் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திரு. கந்தையா சிவநேசன் அவர்கள், Read more

ஐ.நா அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம்-

samanthaஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், இன்றுபிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருரகைதந்துள்ள அவர், அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதன்பொருட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள சமந்தா பவர் இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், இன்று இலங்கை வந்துள்ளார். அவர் இன்றிலிருந்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, அமெரிக்க மற்றும் இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சமந்த பவர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், அங்குள்ள உள்ளுர் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. தமது யாழ். விஜயத்தின்போது, மோதல்களினால் சேதமடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழாவில் சமந்தா பவர் கலந்துகொள்வதுடன், யாழ். நூலகத்தையும் நேரில்சென்று பார்வையிடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரியபெத்தையைச் சேர்ந்த 73 குடும்பங்களும் வேறிடத்திற்கு மாற்றம்-

meeriyabeddaபதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 73 குடும்பங்களைச் சேர்ந்த 390 பேரும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீரியாபெத்தையில், கடந்த 19ஆம் திகதி 100 மில்லிமீற்றர் மழை பெய்தமையால், மேற்படி 73 குடும்பங்களும் உடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பில் அரசாங்க செயலாளர் சிரோமி ஜீவமாலா தெரிவிக்கையில், மேற்படி 73 குடும்பங்களை சேர்ந்தவர்களும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு இடவசதி போதாமையினால் மாற்று இடமொன்றுக்கு அம்மக்களை குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உலருணவு மற்றும் அடிப்படை உதவிகளையும் வழங்க பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இதேவேளை, ‘தியகல தோட்டத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதனால் அங்கிருந்து சுமார் 60 குடும்பங்களை கொண்ட 300 பேர் பொது இடமொன்றில் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பிரதி அமைச்சர் உள்ளிட்ட ஐவருக்கெதிராக வழக்கு-

sarath kumaraகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற அரசாங்க நிதி துஸ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது. நீர்கொழும்பில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரசார கூட்டம் ஒன்றுக்காக, அரசாங்க நிதியிலிருந்து 132 லட்சம் ரூபாய் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக் குற்றச்சாட்டு தொடர்பில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. அந்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார் குணரத்ன உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனடிப்படையில் குறித்த ஐந்து பேருக்கு எதிராகவும் வழக்கு தொடருமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா அறிக்கை ஆராயப்படுகிறது-மெக்ஸ்வல் பரணகம-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள முற்கூட்டிய அறிக்கையை ஆய்வு செய்து வருவதாக, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த குழு கடந்த 9ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று விசாரணைகளை நடத்தியதுடன், திருகோணமலையில் இரகசிய துன்புறுத்தல் முகாம் ஒன்று காணப்படுவதாகவும் கூறியிருந்தது. இவ் விடயங்களை கொண்டுள்ள அறிக்கையை தற்போது ஆய்வு செய்து வருவதாக மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அதேநேரம், ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்னறிவிப்பு இன்றியே திருகோணமலை முகாமிற்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை-

jailபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 அரசியல் கைதிகள், புனர்வாழ்வளிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியேற்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அமைச்சர் எம்.சுவாமிநாதனுக்கும், சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி 20 அரசியல் கைதிகள் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வளிப்பு நிலையத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு மனவள ஆலோசனையும், தொழிற்சாலை பயிற்சிகளும் வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்-

budget (2)எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

கடந்த அரசாங்கத்தைப் போல அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது.

தமது புதிய அரசாங்கம் மூலம் தேசிய பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும். Read more

ploteஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) கட்சியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகைக்கு இணங்க, அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.

கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
மாண்புமிகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

கடந்த 23.10.2015 அன்று தங்களால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்ட எமது வாய்மூல பரிந்துரைகளை எழுத்தில் சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க எமது கட்சியின் எழுத்துமூல பரிந்துரைகளை இத்தால் சமர்ப்பிக்கிறோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது கட்சியின் இந்தப் பரிந்துரைகள், எதிர்காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற இன நல்லிணக்க முயற்சிகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவினையும், நம்பிக்கையையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
Read more

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க குழு நியமனம்-

ranil wickramaநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
விஜேதாஸ ராஜபக்ஷ
டி.எம். சுவாமிநாதன்
நிமல் சிறிபால டி சில்வா
சுசில் பிரேமஜயந்த
லக்ஷ்மன் கிரியெல்ல
மலிக் சமரவிக்ரம
சம்பிக்க ரணவக்க
மனோ கணேசன்

புகலிடக் கோரிக்கையாளர்கள் இடைமறிப்பு-

boatஅவுஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவு கடற்பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு ஒன்றை அந்நாட்டு கடற்படையினர் இடைமறித்துள்ளனர். குறித்த படகில் 8 பேர் பயணம் செய்துள்ளதாகவும் இவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. அத்துடன் படகில் பயணம் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இதுவரை தகவல் வெளியிடப்படாத நிலையில், அவர்கள் கடற்பாதுகாப்பு அதிகாரிகளினால் நடுக்கடலில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த படகு இடைமறிக்கப்பட்டமை தொடர்பில் அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. இதேவேளை, சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோருவோர் கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டு பப்புவா நியுகினி மற்றும் நவ்ஷரூ தீவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்

ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை-

fdfdfdநாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒஷதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார். இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50இனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக்கல் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

64சதுர கிலோமீற்றர் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை-

mineவடக்கு, கிழக்கு மாகாணங்களின் 64 சதுர கிலோமீற்றர் பகுதியில் இன்னும் கண்ணி வெடிகள் அகற்றப்படாமலிருப்பதாக கண்ணிவெடியை தடை செய்வதற்கான இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. போர் சூழலின் போது கண்ணி வெடிகளை தடை செய்வது மற்றும் இலங்கையில் கொத்தணி குண்டுகளை தடைசெய்வது தொடர்பான இரண்டு மகஜர்கள் குறித்தும் இலங்கையில் அங்கவீனமானவர்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. முகமாலை, கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளிலுள்ள 64 சதுர கிலோ மீற்றரில் இதுவரை கண்ணி வெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு கண்ணி வெடி பாதிப்பு நிலவிய 2064 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இதுவரை 2000 சதுர கிலோமீற்றர் பகுதியிலுள்ள கண்ணி வெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)

008aயா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் 17.11.2015 அன்று புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களினால் பாடசாலை அதிபர் திருமதி சத்தியபாமா தர்மேந்திரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாகவும், பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்குமுகமாகவும் இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதேபோல் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள யாஃபுங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய பாடசாலை திருத்த வேலைக்காக (பாடசாலை கூரை, முகட்டோடு மாற்றுதல், மின்சார உபகரணங்கள் மாற்றுதல் ரூ திருத்த வேலைகள் மற்றும் ஹரிதாஸ் நிறுவனத்தால் அமைத்துக் கொடுத்த மழைநீர் தொட்டியின் திருத்த வேலைகள் போன்றவைக்கு) சிறியதோர் நிதிப் பங்களிப்புச் செய்யப்பட்டது.
Read more

புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமனம்-

sri lankaஇலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரியாணி விஜயசேகர அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான தூதுவராக கருணாசேன கொடிதுவக்கும், இத்தாலிக்கான தூதுவராக டீ.எஸ்.எல்.பெல்பொல ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தோனேஷியாவுக்கான உயர்ஸ்தானிகராக தர்ஷன பெரேராவும், ஜோர்தான் தூதுவராக ஏ.எல்.எம்.லபீரும், மியன்மார் தூதுவராக கே.டப்ளியூ.எம்.டீ.கருணாரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சவுதி அரேபியத் தூதுவராக ஏ.எம்.தஷீமும், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராக சுனில் டீ சில்வாவும், சிங்கப்பூர் உயர்ஸ்தானிகராக நிமல் வீரரத்னவும், துருக்கிக்கான தூதுவராக சீ.எம்.அன்சாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான தூதுவராக எஸ்.ஜே.மொஹைடீன் தேர்தவு செய்யப்பட்டுள்ளதோடு பலஸ்தீன் தூதுவராக எம்.எஸ்.அன்வர் தெரிவாகியுள்ளார்.

வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் இராஜினாமா-

npc2_CIவடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, அவரது இடத்துக்குப் பதிலாக அகிலதாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்து பதவி விலகச் சொன்னதாகக் கூறி, அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர். அங்கஜன் விளக்கம் கோரியுள்ளதுடன் அகிலதாசின் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்-

ravanaதற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இராவண பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு குறிப்பாணை ஒன்றை கையளித்துள்ளது. இதில் இராவண பலய அமைப்பினரும் இது தொடர்பாக செயற்படும் 100க்கும் அதிகமாக தேரர்களும் கூடியிருந்தனர். அரசியல் கைதிகளை விடுவித்தால் நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகக்கூடும் என இதில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொது செயளாலர் வண. இத்னேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசராக சித்திரசிறியை நியமிக்க அனுமதி-

courts (2)உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சபை இன்றுகாலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த கே.டி.சித்திரசிறி உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகள் காட்டிக் கொடுத்தன-

sfdfdfdfதிருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு கடற்படையின் இரகசியத் தடுப்பு முகாம் என்று சொல்லப்பட்ட நிலையத்துக்கும் சென்றோம். அங்கிருந்த சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்து பார்க்கின்ற போது, அங்கு பல பேர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அக்குழுவினர், நாட்டில் 10 நாட்கள் தங்கியிருந்தனர். அக்குழுவினர், கொழும்பு, மாத்தளை, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருக்கோணமலை உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துள்ளனர்.
Read more