Header image alt text

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)-

wrerமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டு மாவட்டத்தில் 1,400ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதோடு, அவர்களை அரசாங்க சேவையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை மத்திய மற்றும் மாகாண அமைச்சுகள் மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதன்பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரை எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 2,700 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட் வருகின்றோம். எங்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது வயதெல்லையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், 35 வயதைத் தாண்டிய 50ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையின்றி உள்ளனர். Read more

காணாமல் போனோர் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டது-

samanthaஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விடயங்களை அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதுவர் சமந்தா பவர் முன்வைத்துள்ளார். அண்மையில் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது தாம் அவதானித்த விடயங்களை அவர் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாரிய அளவானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தாரை இலங்கையில் சந்திக்கக்கிடைத்து. அவர்கள் எவ்வாறு காணாமல்சென்றனர் என்பது குறித்த விபரங்களை அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முன்வைத்தனர். அதேநேரம் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், அதற்கு பதிலாக அவர்களுக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்குவது முறையானது என்றும் சமந்தாபவர் கூறியுள்ளார்.

கோட்டபாயவின் மனு விசாரணையிலிருந்து நீதவான் விலகல்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து நீதவான் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். இன்று குறித்த மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , தனிப்பட்ட காரணத்திற்காக தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதவான் பிரியந்த ஜயவர்தன அறிவித்துள்ளார். காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் தம்மை கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை வெளியிடுமாறு கோரி கோட்டபாய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணைகனை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய நீதிபதி குழு நியமிக்கப்பட்டிருந்தது. இன்னிலையில் குறித்த குழுவில் இருந்து பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார். குறித்த மனுவின் விசாரணைகள் மே மாதம் 25ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும்-அமைச்சர் ராஜித-

rajithaஎதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திரதின கொண்டாட்டத்தின் பாது, தேசிய கீதம் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பாடப்படவுள்ளது. இதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து இந்த இறுதித் தீர்மாத்தினை எடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு ஒரு சிலரின் எதிர்ப்பு வந்த போதிலும் இந்த யோசனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேசிய கீதத்தினை தமிழ் சிங்கள மொழியில் பாடப்படும் நடைமுறையை இந்த தேசிய தினத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என அமைச்சர்; ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் சுதந்திர தினத்தில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இயற்றும் புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. சகல அரச நிகழ்வுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வைபவங்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இயற்றப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more

ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்டகப்பட்டுள்ளது. கொழும்பு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்றுகாலை ஞானசார தேரர் சார்பில் பிணை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை வழங்க மறுத்துள்ளார். கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, நீதவானால் உத்தரவிடப்பட்டது. இதன்படி கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்-

fgயாழ். அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலவெடிப்பு இடம்பெற்ற தோட்டப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொதுமக்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும், 500 மீற்றர் தூரத்தையும் சுற்றி மஞ்சள் பட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு தொடர்பில் பணிப்பாளர் கூறியதாவது, ‘இங்கு நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். இது ஒரு சாதாரண நில வெடிப்பு ஆகும். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு மயோசின் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. யாழ்ப்பாணத்திலுள்ள நிலாவரை நீருற்று, வில்லூன்றி தீர்த்தக்கேணி, கெருடாவில் குகை என்பன பல மில்லியன் காலத்துக்கு முன்னர் ஏற்பட்ட பாறை மாற்றங்களால் ஏற்பட்டதாகும். நிலத்தின் கீழுள்ள சுண்ணாம்பு பாறையில் ஏற்பட்ட சிறு விரிசலாக இது இருக்கக்கூடும். இது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, நிலத்தடி மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, சரியான விடயம் தெளிவுபடுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் 40,000பேர் இறக்கவில்லை-மக்ஸ்வெல் பரணகம-

maxwel paranagamaஇறுதிக்கட்டப் போரின் இறுதி வாரங்களில், பொதுமக்கள் 40,000பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என ‘பரணகம’ ஆணைக்குழு எனப்படும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சனல்4 தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோவின் அண்மைய இலங்கை விஜயத்தின்போதும் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டதாக, மேற்படி காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாகவும் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என நம்பப்படுவது புனைவு என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை என்றும் போரின்போது, புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை என்றும் எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தவிர, விசேட விசாரணை அணியொன்றினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், போரின்போது காணாமல்போனதாகக் கூறப்படுவோரின் குடும்பங்களுக்கு தகவல்களை அளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கச்சதீவு விழாவில் பங்கேற்க தமிழகத்திலுள்ள இலங்கையர்க்கு அனுமதி மறுப்பு-

kachchative thiruvilaகச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வருகை தருவதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் வட்டாராச்சியார் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெிளியட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது சக்கத்தீவு செல்வதற்கு தமிழக விசைப்படகுகள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக திருவிழா ஏற்பாட்டாளர் இராமேஸ்வரம் பங்குத் தந்தை சகாயராஜ் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு திருவிழாவிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தி அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு இராமேஸ்வர கோட்டாராச்சியார் ராம்தீபன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் 470 தமிழர்கள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்-

imagesகடந்த ஒரு வருட காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து 470 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டு ஜனவரியில் தற்போது வரையான காலப்பகுதியில்வரையில் இந்த எண்ணிக்கையானவர்கள், நாடு திரும்பி இருக்கின்றனர்.

இறுதியாக கடந்த 26ம் திகதி 20 வது ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்பி இருந்தனர்.

அதேநேரம், தற்போது தமிழ் நாட்டில் உள்ள 109 அகதி முகாம்களில், 64 ஆயிரம் பேர் வரையில் அகதிகளாக தங்கியிருக்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவர்-பிரதமர்-

ranil (5)எதிர்வரும் மே மாதமளவில் யுத்த குற்றங்களுக்கான விசாரணை பொறிமுறை அமுலாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “செனல் போ” தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அண்மையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறைக்குள் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் சர்வதேச நீதிபதிகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என குறிப்பிட்டார். அத்துடன் ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இந்த விடயத்தில் மக்களின் நன்மை கருதியே செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிட்டிருந்தமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் இறுதி யுத்தத்தில் பாதியளவான பொது மக்கள் பலியானமை உண்மையே. எனினும், நாற்பதாயிரம் பேர் இறந்தனரா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. இதனை அறிவதற்கு ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை, காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின தேசிய நிகழ்வில் பிரதமர் கூறியிருந்தார். Read more

மேலதிகமாக 373,712 பேர் வாக்களிக்கத் தகுதி-

vote2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 373,712 பேர் கடந்த வருடத்திலும் பார்க்க மேலதிகமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் 2015ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைவாக 15,421,202பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளர் 2014ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஒரு கோடியே 15,047,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 2015ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹம்மட் தெரிவித்துள்ளார். 1,680,887பேர் கம்பஹா மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,640,946 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை 2015 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் குறைந்தளவிலான வாக்காளர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 201 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

பரணகம ஆணைக்குழு கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தமக்கான கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளமையால், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது ஆணைக்குழு முன்னிலையில் முன்வைத்த 14000 முறைப்பாடுகளில் 5000 முறைப்பாடுகள் குறித்தே விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக மக்ஸ்வெல் பரணகம செவ்வியொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய இந்த ஆணைக்குழு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆணைக்குழுவின் கால எல்லை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதியுடன் அதன் கால எல்லை, மீண்டும் நிறைவடையவுள்ளது.

வெள்ளை வான் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது-

school vanயாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, இன்று காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். கடந்த 16ஆம் திகதி இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ள இந்த மூவரும், உன்னை வெகுவிரைவில் வெள்ளை வான் கொண்டு வந்து கடத்துவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர். எனினும், குறித்த யுவதி வாகனத்தின் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்துள்ளதுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். வாகன இலக்கத்தினை அடிப்படையாக வைத்து துரித விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் நிதியுதவி-

gffgfஇலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் பெற்றுக் கொடுக்கப்படும் நிதி உதவியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2017ம் ஆண்டுக்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக பெற்றுக் கொடுக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே, அந்த வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் மோன் மொக் சோய் இதனைக் கூறியுள்ளார்.

பெருந் தெருக்கள், குடிநீர் வேலைத்திட்டம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே இந்த நிதி வழங்கப்படுவதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு புதிய குழு அமைப்பு-

sivajiபுதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக வட மாகாண சபையால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வட மாகாண சபை அமர்வின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்களாக 19 பேர் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ் பல்கலையில் பௌத்த விகாரை வேண்டும்-பௌத்த மாணவர்கள் ஒன்றியம்-

tttயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி, சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மாணவர் ஒன்றியம் என்று அந்த சுவரொட்டிகளின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் கவனயீப்புப் போராட்டம்-

sddபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் கிழக்குமாகாண கல்வி வலயங்களில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் சுமார் 250க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அவ்விடத்திற்கு வருகைதந்த மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் மற்றும் கல்வி அதிகாரிகள் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் காணி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய ஆலோசகர்கள் மகஜர்களை கையளித்தனர். இவ்விடயத்தினை கல்வி அமைச்சுக்கு தெரிவித்து உறுதியான பதிலைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது. இதேவேளை, இலங்கையின் கல்விக்கொள்கையை பாடசாலைகளில் வகுப்பறையில் அமுல்நடத்தி ஒழுங்குபடுத்தும் பணியை ஆசிரிய ஆலோசகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தொழில் அதிபர் பணி போன்றவற்றைவிட ஆசிரிய ஆலோசகரின் சேவை தனித்துவமானது. இதற்கென ஒரு தனியான சேவை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது 1960ஆம் ஆண்டில் இருந்து விடுக்கப்படும் வேண்டுகோளாகும். இதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அவைகளில் இச்சேவை ஆரம்பிக்கப்பட முடியும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கில் இச்சேவை வழங்கப்படுவதற்கு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவையை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பிரகடனம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைப்பு-


gnanasaaraபொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காணாமல் போனதாகக் கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை ஞானசார தேரர், திறந்த நீதிமன்றத்தில் வைத்து திங்கட்கிழமை (25), ஏசியதாக நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே, அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டதை அறிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தேரர்கள் உள்ளடங்கலாக 200பேர், தங்களையும் கைதுசெய்து, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கோஷமிட்டனர். ‘எங்களைக் கைது செய்’, ‘பசங்களா வாங்கடா’ என்று, தேரர்கள் கோஷமிட்டனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை வாகனத்துக்கு அண்மையில் வந்த தேரர்கள், வாகனத்துக்கு முன்பாகவும் டயர்களுக்கு கீழேயும் படுத்துக் கொண்டனர், இன்னும் சில தேரர்கள், புரண்டு, புரண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துணுக்காய் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் காலணிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

A2வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2ம் கட்டமாக துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் வலயக்கல்வி பணிமனை விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று 2ம் கட்டமாக துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் தாய் தந்தையயை இழந்த பிள்ளைகள், பெண்தலமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகள் என அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 158,000 ரூபா பெறுமதியான 8 துவிச்சக்கரவண்டிகளும் 60 புத்தகப்பைகள் மற்றும் 44 காலணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் செயற்றிட்டத்திற்கு நிதி அனுசரனைகளினை 8 துவிச்சக்கர வண்டிகளுக்குமான சுமார் 80000 ரூபாவினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த ஒர் கருணையுள்ளம் கொண்ட பெண்மணியும், 44 காலணிகளுக்குமான நிதியினை வட்டுக்கோட்டை சேர்நத புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிவராசா டினேஸ் 10000 ஷரூபாவும் மற்றும் வட்டுக்கோட்டை சேர்ந்த புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த ஒர் கருணையாளன் 35000ரூபாவும் மற்றும் 60 புத்தகபைகளுக்கான 33000ரூபா நிதியினை கொழும்பில் உள்ள ஒர்கல்வி சேவையாளரும் பிரபல ஆசிரியரும் வழங்கியுள்ளனார். Read more

ஞானசார தேரர் விளக்கமறியலில் வைப்பு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றவேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார். இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, ஹோமாகம நீதிமன்றம் முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

ஹிருணிகாவின் டிபென்டர் வாகனம் விடுவிப்பு-

defenderகொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து நபரொருவரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தை, 45 இலட்சம் ரூபா பெறுமதியான பிணை முறியில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டவேளை, இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு குற்றப் பிரிவினரால் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள டிபென்டரை விடுவிக்குமாறு, பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். விசாரணைகள் நிறைவடைந்துள்ளமையால் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பில்லை என, கொழும்பு குற்ற பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததன் பின்னர், டிபென்டரை பிணை முறியில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தினத்தில் குறித்த வாகனத்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், டிபென்டர் வாகனத்தை மாற்றத்திற்கு உட்படுத்த கூடாது எனவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் கல் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் சடலமாக மீட்பு-

trincoதிருகோணமலை சம்பூர் 07ம் வட்டாரத்தில் முழுமையாக கட்டப்படாதிருந்த கிணற்றில் இருந்து, வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான சிறுவன் சம்பூர்-07ம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) எனத் தெரியவந்துள்ளது. 1ம் தரத்திற்கு இவ் வருடமே சேர்க்கப்பட்ட இவர், தனது சகோதரனுடனும் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் நேற்றுமாலை 4மணியளவில் விளையாடச் சென்றுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டு சிறுவன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 5.30ஆகியும் பிள்ளை வீடு வராமையால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பின் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது அவர் இறந்த நிலையில் கிணறு ஒன்றுக்குள் கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதலில் சிறுவன் கிணற்றுக்குள் இடறி விழுந்திருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது. இது சம்பந்தமாக திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லாவிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அவர், ஊர்மக்களுடன் உரையாடி விட்டு இன்று 12.10 அளவில் சுழி ஒடத் தெரிந்த ஒருவரை இறங்கி சடலத்தை எடுக்குமாறு கேட்டதிற்கிணங்க இளைஞன் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்து வெளியில் கொண்டு வந்தபோது எல்லோருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்தது. சிறுவனுக்கு என்ன நடந்தது என்கின்ற விடயம் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ரி.எம்.வி.பி பொதுச்செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்-

prasanthanபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு காவல் உத்தரவு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பெப்ரவரி 09ம் திகதிவரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார். குறித்த வாக்குமூலத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.இதன் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தடுப்பு காவல் உத்தரவை நீடிக்க நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் முன் வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம்.கணேசராசா தடுப்பு உத்தரவு நீடிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

எண்ணெய் கலப்பில் பாதிப்படைந்த கிணறுகள் குறித்து ஆய்வு-

chunnakam wellயாழ். சுன்னாகம் கழிவு எண்ணெய் கலப்பினால் பாதிப்படைந்த நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பது தொடர்பாக பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 10 மணிமுதல் 1.30மணி வரை முருகேசு பண்டிதர் வீதியிலுள்ள சுன்னாகம் தெற்குச் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட புத்திஜீவிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களால் இப்பிரச்சினைக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எவ்வித தாமதங்களும் இன்றித் தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்களுக்கு உள்ளனர்களுக்கு மருத்துவ நிவாரணங்களை உடனடியாக வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரைவடிகட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்கவேண்டும். Read more

குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

DSC_0164 (1)யாழ். குப்பிளான் தெற்கு கலைவாணி சனசமூக நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் 23.01.2016 குப்பிளான் தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டிடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சனசமூக நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more