பங்களாதேஷ் தலைநகரில் பாரியளவில் துப்பாக்கிச்சூடுகள்-

rtttபங்களதேஷ் தலைநகர் டாக்காவின் கஃபேயில் நேற்றிரவு தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் அப் பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடவடிக்கையை தடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த சம்பவத்தின் மையமாக கருதப்படுகின்ற குறித்த விடுதி, புலம்பெயர்ந்த மக்கள், இராஜ்ஜிய அதிகாரிகள் மற்றும் மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும். தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதேர்டு 30பேர் வரையில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்கியிருந்தனர். இந்நிலையில் இலங்கையர் இருவர் உள்ளிட்ட 20 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். இந்த தாக்குதலில் 20பேர் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். அமைப்பு கூறியுள்ளது. ஆனால் பங்களாதேஷ் அரசு வெளியிட்டுள்ள தகவலில் இரண்டு போலிசார் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல கஃபேவைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இவர்களுள் இரண்டு இலங்கையர்களும் பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்து அந்த பகுதி முழுமையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பணயக்கைதிகளில் 12பேர் பங்களாதேஷ் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அதில் இரு இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பிந்திய தகவல்களின்படி, 14 பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பயணயக் கைதிகள், 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பங்காளதேஷ் இராணுவ அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.