dfdவஸ்கமுவ தேசிய பூங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில், 38 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார். வனவிலங்கு அதிகார சபை அதிகாரிகளுக்கும், வேட்டையாடுபவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வனவிலங்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, வேட்டையாடுபவர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், வனவிலங்கு அதிகாரியொருவரும் கைது செய்யப்பட்டார். வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த மூவரை சரணடைந்துவிடுமாறு கூறியபோதும், அவர் இந்தத் துப்பாச்சிக்சூட்டுப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.