Q6வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்த்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 100 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்று எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டைச் சேர்ந்த சிவதீபன் நந்தினி தம்பதிகளின் திருமண ஆண்டை முன்னிட்டு கடந்த யுத்தத்தின்போது தமது கணவனை இழந்து தங்களின் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் 100 பிள்ளைகளக்கு புத்தகபைகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இப் பிள்ளைகளுக்கு தவனைகள் தோறும் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றது. அதை முன்னிட்டு அடுத்த தவணை தொடக்கத்திற்கு தேவையான புத்தகப்பைகள் தொடர்பில் அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இன்று இப் பிள்ளைகளுக்கு தமது திருமண ஆண்டை முன்னிட்டு 100 புத்தகப்பைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ள

திரு.திருமதி. சிவதீபன் நந்தினி தம்பதிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளிகளின் பிள்ளைகள் சார்பாகவும் திருமண நல்வாழ்த்துக்களை கூறிகொள்ளும் தருணம் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழந்து நற்பணிகள் செய்ய இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

Q1 Q2 (1) Q3 Q8 Q9 Q10