ddddddயாழ். சுன்னாகம் வாழ்வகத்தின் 30ஆவது ஆண்டினை முன்னிட்டு கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப்பேருரையும் எதிர்வரும் 11.09.2017 திங்கட்கிழமை காலை 9மணியளவில் சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வகத்தின் செல்லா மண்டபத்தில் திரு. ஆறுமுகன் ரவீந்திரன் (தலைவர், வாழ்வகம்) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக திரு. அ.பத்திநாதன்(பிரதம செயலாளர், வடக்கு மாகாணம்), அவர்கள் கலந்து கொள்வதோடு, நினைவுப் பேருரையினை வைத்தியக்கலாநிதி த.சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ். போதனா வைத்தியசாலை) அவர்கள் ஆற்றவுள்ளார். சிறப்பு அதிதிகளாக வைத்தியக்கலாநிதி அ.சுரேஸ்(பல் வைத்திய நிபுணர், ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை), திரு ப.பிரகலாத் (வட பிராந்திய முகாமையாளர், கார்கில்ஸ் வங்கி), திரு. சி.யோகபாலன் (உரிமையாளர், டெய்லி பூட்சிற்றி, கொக்குவில்), செல்வி செ.பெனடிக்றா (பழைய மாணவி வாழ்வகம், ஆசிரியை மன்/மறத்த கன்னாட்டி றோ.க.த.க.பாடசாலை), திரு. வி.விஸ்ணுகரன் (ஆசிரிய ஆலோசகர், விசேட கல்வி, வலிகாமம் கல்வி வலயம்), திரு. மு.செல்வக்குமார் (பிரதான பொலிஸ் பரிசோதகர், பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் சுன்னாகம்) ஆகியோரும், கௌரவ அதிதிகளாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் முழுமையாகக் கலந்துகொண்டு தம்மை மகிழ்விக்குமாறு வாழ்வக சமூகம் அழைத்து நிற்கின்றது. தொடர்புகட்கு: 0212240146, 0768286331

kk kkk