பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில், இராணுவத் தூதுவராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி, பிரித்தானிய அரசிடம் பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் உறவுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள், குறித்த இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளித்து, பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.